India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள பாட்டவயல் கிராமத்தைத் தாண்டி, வெள்ளரி என்னும் இடத்தில் இன்று மாலை சாலையோரம் ஒரு காட்டு யானை நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். இந்தப் பகுதியில் பகலிலேயே யானை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால், பொதுமக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்புச் சோதனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் பகுதியாக, இன்று உதகை மேற்கு காவல் நிலைய எல்லையில் உள்ள தர்ஷன் பகுதியில் தனிப்படையுடன் நேரில் சென்று எஸ்.பி நேரடியாக விசாரணை மேற்கொண்டார். இந்த சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கூடலூர் மேரா யுவா பாரத் அமைப்பின் கீழ் கூடலூரில் நடைபெற்ற தொகுதி அளவிலான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு மேரா யுவா பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் தலைமை தாங்கினார். விருது வழங்கும் விழாவில் வசந்தகுமாரி, சரஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர், நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் ஜாபர் உள்ளிட்டோர்

உதகை நகராட்சி ஆணையாளர் கணேஷ் தலைமையில் நகர அமைப்பு திட்டப் பிரிவு அதிகாரிகள் குழு இன்று விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. நகரின் பல பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிட ஆவணங்களை இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரித்தார்.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இன்று ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகள் நடத்தினார். காவல் நிலையப் பகுதிகளை நிரந்தரமாகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உலாவுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குன்னூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று கம்பீர நடை போட்டு நடந்து செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளது.

ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, குன்னுார் ரயில் நிலையத்தில், சோதனை நடந்தது. குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.போலீசார் கூறுகையில், ‘ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும்,’ என்றனர்.

கூடலூரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில், கர்நாடகாவுக்கு கேழ்வரகு கடத்துவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.கூடலுார் வட்ட வழங்கல் அலுவலர் நடேஷன் மற்றும் ஊழியர்கள் நேற்று, மாலை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அப்போது, கர்நாடக அரசு பஸ்சில் ஏற்றுவதற்காக சில மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை ஆய்வு செய்து 300 கிலோ கேழ்வரகை பறிமுதல் செய்தனர். இதனை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் புதிய மினி பஸ் வழித்தடங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள்: ஊட்டி ஏ.டி.சி. முதல் முட்டிநாடு/ எம். பாலாடா, குன்னூர் முதல் பில்லூர் மட்டம், ஊட்டி மார்க்கெட் முதல் குருசடி காலனி, மற்றும் மருத்துவமனை வரை நீள்கின்றன. மேற்கண்ட வழித்தடங்களில் பஸ் இயக்க விரும்பும் உரிமையாளர்கள் ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நாளை (28ஆம் தேதி) காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவின் செய்தி வெளியீடு: ஊட்டி, குன்னூர், கூடலூர் உட்பட 9 மையங்களில் 2,604 பேர் தேர்வை எழுதவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.