India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி அடுத்த தங்காடு ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,67. இவரை வாலிபர் ஏடிசி அருகே ஒருவர் குடிக்க பணம் கேட்டு மிரட்டி கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்து இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஊட்டி மேல் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த சாந்தகுமார்,26, என்பவரை பிடித்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கொலை வழக்கு பதிவு செய்து, சாந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,” ஊட்டியில் நகராட்சி இடங்கள்; ‘பார்க்கிங் தளங்கள்’, நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.அதில், பூங்கா சாலையோர பகுதிகள், கமர்ஷியல் வாணிப ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட்,படகு இல்ல சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை சீசனுக்குள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ளஅறிக்கையில், ‘மீண்டும் மஞ்சப்பை விருது பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றும், சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ம் பரிசு ரூ.5 லட்சம், 3ம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 1.5.25 ஆகும்.
குன்னுார் மார்க்கெட் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத, 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.இந்நிலையில், மார்ச் இறுதி நிதியாண்டு நிறைவு என்பதால், வாடகை வசூலிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களில், 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதில், கோழிக்கடை உரிமையாளர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கியதால், அவரது கடையில் வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகளின் கோரிக்கை ஏதேனும் இருப்பின் நாளைக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி-01, என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு 140 இருக்கைகளும்,குன்னூர் முதல் உதகை வரை மொத்தம் 220 இருக்கைகளில் 80 முதல் வகுப்பு இருக்கைகளும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக, அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி இடையே தினமும் தலா நான்கு முறை நீலகிரி மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும் குன்னூரில் இருந்து ஊட்டி வரை கூடுதல் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
241 ஜூனியர் கோர்ட் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.72,040 வழங்கப்படும்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்<
நீலகிரி மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, மசினகுடி அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நாளை துவங்குகிறது. முதலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.ஐந்து நாட்கள் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.