India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குந்தா வனச்சரகம், பிக்கட்டி காவல் பகுதியில் அடர்ந்த வனத்தில், ஊசிமலை தேவபெட்டா முருகன் கோவில் பகுதியில், பாலித்தீன் பேப்பரால் கூடாரம் அமைத்து, அங்கு இருந்த விறகுகளை கொண்டு நெருப்பு பற்ற வைத்து, குளிர் காய்ந்து இரவு அங்கேயே தங்கிய கோகுல் கண்ணன், ரித்திக், விக்னேஷ்வரன் ஆகிய மூவரையும் பிடித்து, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், வனப்பகுதியில் தங்க கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்களின் விலை அதிகரித்து உள்ளது. நீலகிரியில் விளைவிக்கப்படும் லில்லியம், ஜெர்பாரா, கார்னேஷன் போன்ற கொய் மலர்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை அதிகரித்து உள்ளது. தற்போது பத்து மலர்கள் அடங்கிய கொத்து லில்லிய மலர்கள் ரூ.300, கார்னேஷன் ரூ.200 ஜெர்பாரா ஒரு மலர் ரூ.4, சிவப்பு ரோஜா ரூபாய் 6க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பாஜக அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வரைவு, புதிய நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார். அவருடன் மாணவர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு புதிய நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அனுமதிக்கப்பட்ட வழிதடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி மீ ஆக இருக்க வேண்டும், மினி பேருந்துகள் இருக்கைகள் ஓட்டுநர் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25க்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள நிலையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு சிறப்பு ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபடத் தொடங்கினர். வன அலுவலர் கௌதம் தலைமையில் 10 குழுக்கள் தனித்தனியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், அந்த பேருந்துகளின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீலகிரியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும், வருவாய் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், முன்னாள் படைவீரர் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் வாழும் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களை சார்ந்தோர் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
மலைவேடன் மக்களின் ஜாதி சான்றிதழ் பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆர்டிஓ சதீஷ்குமார் கூறுகையில், நீலகிரியில் 6 பழங்குடியினர் மட்டுமே அரசாணையில் உள்ளது. மலைவேடன் பழங்குடியினர் நீலகிரிக்கு இடபெயர்ந்து வந்ததால் அரசிதழில் இடம்பெறவில்லை. 1995முதல் சாதி சான்றிதழ் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. கோரிக்கையை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் கமிட்டி மக்களை சந்திக்க வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத நிலையில், இந்த செல்பி ஸ்பாட் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, இத்தாலியன் பூங்கா அருகே உள்ள ‘செல்பி ஸ்பாட்’ மேரி கோல்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நின்ற பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.