India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், கோத்தகிரி ஒரசோலையை சேர்ந்த மனோ என்பவர், கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராக இருப்பதாக கூறி, தனது மகன் உட்பட 10 பேரிடம், வேலை வாங்கி தருவதாக ரூ.5.1 லட்சம் பெற்று, ஏமாற்றியதாக சதாசிவம் என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து, ஆட்சியரின் புகாரின் பேரில் ,டிஎஸ்பி சக்திவேல் அன்று மாலைக்குள் மோசடியாளரை கைது செய்தது பலரது பாராட்டையும் பெற்றது.
மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 இடங்களில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டுத்தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை வனத்துறை தடை விதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுலா பயணிகள் மூலம் அதிக அளவில் வருவதால் சோதனை சாவடிகளில் தரமான சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்க படுகின்றன. மேலும் கடைகளில் தடை செய்ய பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தால், அந்த கடைக்கு உடனடியாக சீல் வைக்க படும் என்று நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்.
குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள தேநீர் கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல் பட்டபோது அப்பகுதி மக்கள் பல இடையூறுகளுக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் கடை மூடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் திறக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மீறி மது கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, அடுத்த மார்ச் மாதம் 6ஆம் தேதி குறைத்தீர் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் தயார் செய்து இம்மாதம் 18ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.