Thenilgiris

News March 22, 2025

உதகை: முதலமைச்சர் பங்கேற்கும் விழா இடங்கள் ஆய்வு

image

உதகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள இடம் மற்றும் முதல்வர் திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட திமுக செயலாளர் கே.எம்.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.

News March 22, 2025

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 22) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 21, 2025

நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை 22-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT

News March 21, 2025

நீலகிரி தேயிலை தோட்டத்தில் யானை உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் உயிரிழப்பு பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் உதகையை அடுத்துள்ள சிங்காரா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் யானையின் சடலம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் நேற்று விரைந்து வந்து யானையின் உடலை மீட்டனர். மருத்துவப் பரிசோதனையில் அது ஆண் யானை என்றும் உடல் நலக் குறைவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

News March 21, 2025

ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா: நீலகிரி போலீஸ் அதிர்ச்சி

image

மண்ணைப் பயன்படுத்தாமல் நீரியல் முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக சாகுபடி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பஸ் நிலையத்தில் முதல் முறையாக பிடிபட்டது. இது நீலகிரி காவல் துறையையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை கஞ்சா 1 கிலோ ரூ.1 கோடி மதிப்புடையது என்பதால் காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

எஸ்பி தலைமையில் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்எஸ் நிஷா தலைமையில், வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது குறைகளை கூற வந்த பழங்குடியின மக்களிடம், அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து, அதற்கான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். உடன் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.

News March 20, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு

image

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நகராட்சியில் ஒப்பந்த பணிகள் குறித்து தலைவரிடம் பேச சென்றபோது தலைவர் சிவகாமி மற்றும் அவரின் உதவியாளர் சைபுல்லா ஆகியோர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர் என ஒப்பந்ததாரர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 20, 2025

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மண் உண்ணும் போராட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் விண்ணப்பித்து அந்தக் குழு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியும். கடந்த, 3 ஆண்டுகளாக குடியிருப்பு கட்ட விண்ணப்பித்தவர்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்க வலியுறுத்தி நீலகிரி கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், ஊட்டி ஏடிசி சுதந்திர திடலில் மண் உண்ணும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.

News March 20, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!