India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர்பண்ணுங்க!

பந்தலுார் அருகே பொன்வயல் பகுதியை சேர்ந்த கனகஜோதி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீட்டிற்கு மின் இணைப்பு கோரி பலமுறை விண்ணப்பித்த போதும், விண்ணப்பம் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டு வந்தது. இவர்களின் நிலை குறித்து பந்தலுார் நீதிமன்ற நீதிபதி பிரபாகரனிடம் தெரிவிக்கப்பட்டது. அவரின் முயற்சியால் தற்போது உடனடியாக ஆய்வு செய்து 15 ஆண்டுகளுக்கு பின் மின் இணைப்பு வழங்கபட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய ஊராட்சிகளின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் வரும், அக்.11ம் தேதி அந்தந்த ஊராட்சிகளில் காலை 11 மணியளவில் நடக்கிறது. கிராமசபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் காவலர் வீரவணக்க நாளை (அக் 21) முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. பெண்களுக்கு எதிரான தொல்லை, போதை தடுப்பு, சாலை பாதுகாப்பு, சைபர்க்ரைம் ஆகிய தலைப்புகளில் ஓவியம் வரைந்து தங்களது பள்ளி விவரம் ஆகியவற்றை பூர்த்திசெய்து வரும் 13-ம் தேதிக்குள் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த விவரங்களை நீலகிரி மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த விவரங்கள் உதகை நகரம், ஊரகம் உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்களைக் கொண்டுள்ளது.

உதகையில், கார்டன் சாலையில் கிடந்த ஒரு கைபேசியை கண்டெடுத்த கல்லூரி மாணவர் ஒருவர், அதை உடனடியாக சேரிங்கிராஸ் காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார், கைபேசியின் உரிமையாளரை தொடர்புகொண்டு வரவழைத்து விசாரித்த பின், அதனை அவரிடம் ஒப்படைத்தார். மாணவரின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து, பரிசும் வழங்கப்பட்டது.

நீலகிரி மக்களே, தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 12 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமமாக மாதம் ரூ.38,908/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வனப் பகுதியில் படுத்து இருப்பதாக தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் பிரித்தி ராம் தலைமையில் காவலர்கள் அவரே மீட்டு அவரை குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் மீட்கப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தூண்டும் விதமாக, சேரிங்கிராஸ் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற இளம் பெண் தற்போது சுற்றுலா வாகன ஓட்டுநராக (Tourist Vehicle Driver) பணியில் சேர்ந்துள்ளார். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

நீலகிரி மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை.வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க
Sorry, no posts matched your criteria.