India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 16 புதிய வழி தடங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்க படுகிறது. மேலம் தனியார் மற்றும் நிறுவனங்கள் புதிய வழி தடங்களில் மினி பஸ் இயக்க ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளார்.
பந்தலூர் குந்தலாடி சிவன் காலனி பகுதியை சேர்த்தவர் ராஜரத்தினம் (52). தனியார் தோட்ட இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பக்கானா கேட் என்ற இடத்தில் சாலை ஓரம் அவரது உடல் கிடந்தது. நெலாக்கோட்டை போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக ஊட்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஊட்டிக்கு வருகை புரிந்தார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கட்டுமான பணிகள் நிறைவு அடைந்த நிலையில், குடிநீர் இணைப்புக்கு ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் நிறைவு பெற்று மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கபடும்’ என தெரிவித்தார்.
உதகை மரவியல் பூங்காவில் தேசிய பசுமை படை சார்பில், பிளாஸ்டிக் எதிர்ப்பு ( ANTI PLASTIC CAMPAIGN ) விழிப்புணர்வு, நாளை 21 தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் டி .பிரகாஷ் குமார்” நெகிழி இல்லா நீலகிரி விழிப்புணர்வு “பசுமை அட்டையை வெளியிட்டு அனைத்து பேருந்துகளில் காட்சி படுத்துகிறார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாசன் ஏற்பாடு செய்துள்ளார்.
நீலகிரி: கோத்தகிரி அருகே குமரன் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி (39). இவர் தனது கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த சந்திரவதனி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.2.30 லட்சம் கட்டியும், மேலும் 1.40 லட்சம் வட்டியுடன் தர வேண்டும் என தொல்லை செய்ததாக அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் சந்திரவதனியை இன்று கைது செய்தனர்.
தகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தனசு.வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் 43 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <
கூடலூர் பந்தலூர் சாலை ஆமைக்குளம் பகுதியில் இன்றைய தினம் காலை கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தேவால காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி மார்லிமந்து அணையை ஒட்டி உள்ள, நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. ஊட்டி வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்று வீசியதால் தீ பரவி, 5 ஏக்கரில் இருந்த முட்செடிகள், புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலாயின. வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.