India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளை புலி வேட்டையாடி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் புலி நடமாட்டம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் அனுப் என்பவரின் பசுமாட்டை புலி கொன்றது. இதனால், இப்பகுதியில் மீண்டும் புலியின் தாக்குதல் அதிகரிக்குமா என்ற பெரும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அவ்வப்போது வாகனங்களில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, உதகை நகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமஸ் சர்ச் சாலையில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா நேரடி மேற்பார்வையில், வாகனங்களில் போதைப் பொருள் சம்பந்தமாக திடீர் சோதனை நடைபெற்று, விசாரணை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம், உதகை ஊரகம் உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு காவல்துறை ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரோந்தில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் மற்றும் அவருடைய அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவி எண் 100 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி: குன்னூர் உபாசி வளாகத்திற்கு 11-வது முறையாக மீண்டும் கரடி வந்தது. அதிகாலை சுமார் 1 மணி நேரம் உபாசி வளாகத்தில் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்தியது. வனத்துறையின் கூண்டு வைத்தும் சிக்கவில்லை. ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்து கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மக்களே G Pay / PhonePe / Paytm பயன்படுத்தும் போது யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். முதலில் https://www.npci.org.in/upi-complaint என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.பின்னர் அந்த பக்கத்தில் உள்ள புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், மொபைல் எண் போன்றவற்றை கொடுத்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது.SHARE பண்ணுங்க!

அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க; இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க

கனரா வங்கியில் காலியாக உள்ள 3500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. வங்கிப் பணியைத் தொடங்க பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே(அக்.12) கடைசி நாள். உடனே விண்ணப்பிக்க இங்கே<

மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – அக். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <

நீலகிரி மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 – 50400 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.