Thenilgiris

News February 28, 2025

3 நாட்கள் மட்டுமே உள்ளது.. உடனே விண்ணப்பியுங்கள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபிக்க இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

கோடநாடு வழக்கு மூவரிடம் விசாரணை

image

கோடநாடு வழக்கில் தொடர்புடைய கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தற்கொலை வழக்கு தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சங்கரன், சுரேஷ், கபீர் ஆகிய மூவருக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி அண்ணாதுரை மூவரிடமும் விசாரணை நடத்தினார்.

News February 28, 2025

நீலகிரியில் ஆட்சி மொழி பயிலரங்கம் – கலெக்டர்

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வாரியம், அரசு துறை பணியாளர்கள், தன்னாட்சி பணியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் போன்றோர் பங்கேற்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.

News February 28, 2025

நடுரோட்டில் மயங்கி விழுந்த சிறுத்தை

image

கூடலூரைச் சேர்ந்த ராஜன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நாடுகாணியை நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தார். இரும்பு பாலம் அருகே சாலையை கடக்கும் போது குறுக்கே ரோட்டை கடக்க முயன்ற சிறுத்தை ஒன்று எதிர்பாரதவிதமாக பைக்கில் மோதி நடுரோட்டில் மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரம் மயக்கத்தில் கிடந்த சிறுத்தை, மயக்கம் தெளிந்து திடீரென காட்டுக்குள் ஓடியது பார்வைகளைப் அசத்தியது.

News February 27, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் தனது விவசாய உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு தினசரி பொது ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கை விற்பனை செய்து வருகிறது. இதன்படி இன்றைய ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை அதிக பட்சமாக ரூ.1600 க்கும், குறைந்த பட்சமாக 1150 க்கும் விற்பனை செய்ய பட்டது. இன்று மொத்தம் 150 மூட்டை வந்தன.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீ போராடி அணைப்பு

image

கூடலுார் அள்ளூர் வயல் பகுதியில் மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்தினர்.மூங்கில்களில் எரிந்துடன், மற்ற பகுதிகளில் தீ பரவியது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் வீரமணி, தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் தாமஸ் மற்றும் பிற வீரர்கள், வன ஊழியர்கள் போராடி இரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

News February 26, 2025

ஊட்டியில் கஞ்சா பறிமுதல்

image

ஊட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தவர்களை விசாரித்த போது, கேரளாவை சேர்ந்த அப்துல்வகாப்,34, ஊட்டி வண்டி சோலையை சேர்ந்த சுஜன்,35, காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர்பால்,35, ஆகியோர் என்பது தெரிய வந்தது. ஊட்டி ஜி-1 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

News February 26, 2025

மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

image

குன்னூர் அருகே உள்ள சிங்கார பகுதியில், தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகே உள்ள தங்கும் விடுதியில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது குழந்தை மிருதுளாசினி, விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். மீனுக்கு உணவளிக்க சென்றபோது, தொட்டிக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

News February 26, 2025

நீலகிரியில் ‘பிளாஸ்டிக்’ தடை மாற்று ஏற்பாடு வேண்டும்

image

கூடலுாரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ”நீலகிரியில் தொடரும் ‘பிளாஸ்டிக்’ பிரச்னையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்து, ‘சீல்’ வைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். நீலகிரி வரும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்க வேண்டும்” என்றார்.

error: Content is protected !!