India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகையில் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், சொத்துமீட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்துமீட்ப்பு குழு தலைவர் கே.வி. தங்கபாலு, AICC இணை செயலாளர் நிதின் கும்பல்கர், கன்வீனர் ராமசுப்பு, உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் டி. செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Business Development Executive, 25 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<

1)நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3)2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4)100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5)newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தென்காசி கோவை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப தங்கும் இடம், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியை சேர்ந்த தம்பதி பிஜு ஜேக்கப்-சரஸ்வதி. இவர்களுக்கு ஆகாஷ் (12). பிரதிக் ஷா (10), லோகித் (2½) என 3 குழந்தைகள் இருந்தனர். கடன் சுமை காரணமாக சரஸ்வதி 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இளைய மகன் லோகித் சிகிச்சை பலனின்றி இறந்தான். கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குன்னுார், சேலாஸ் சாலையில் படுத்திருந்த காட்டெருமையின் அருகில் சென்ற உலிக்கல் நேர்கம்பை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27), ஜீவக்குமார் (27), கோபால கிருஷ்ணன் (35) ஆகிய மூவரும் ஆபத்தை அறியாமல் அமர்ந்தும், நின்றும் செல்பி எடுத்துள்ளனர், இச்செயலை எச்சரிக்கும் விதமாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் மூவருக்கும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.