India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் அருகே தவளை மலை காட்சி முனை பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.02) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியை சார்ந்த ஜாபர் என்ற சுற்றுலா பயணி அங்கு சென்ற போது அங்கிருந்த தேனீக்கள் அவரை கொட்டியதில் அவர் பரிதமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
“நீலகிரி கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இது அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிகம் தேவைப்படமாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊட்டியை சேர்ந்த வாலிபரிடம், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, ரூ.18 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் முதலீடு செய்தால் கூடுதல், இரட்டிப்பு லாபம் கிடைக்கும், என ஆசை வார்த்தை கூறி, முதலில் ரூ.50,000 முதலீடு செய்து பல தவணைகளில் ஆன்லைன் முறையில் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு பணம் ஏதும் கிடைக்காததால் ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டயாமக்கப்பட்டது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில், நாளை ஒரு நாள் முழு கடை அடைப்புப் போராட்டம் நடக்கும் என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால், இ-பாஸ் முறை ரத்து உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இப்போரட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து, சில்ஹல்லா மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தது போல், நாளை 24 மணி நேரம் கடை அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க விருப்பமில்லை எனில் தங்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in தங்களது குடும்ப அட்டையினைப் பொருள் இல்லாத குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்” என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நாளை ஏப்.1 முதல், வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும். இதில், வார நாட்களில் 6,000 வாகனங்கள், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். SHARE IT!
நீலகிரி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் வரும் ஏப்.2 மற்றும் 3 இரண்டு நாட்களுக்கு நீலகிரி உட்பட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.