Thenilgiris

News March 7, 2025

குன்னுாரில் 16 கடைகளுக்கு சீல்

image

குன்னுார் மார்க்கெட் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத, 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.இந்நிலையில், மார்ச் இறுதி நிதியாண்டு நிறைவு என்பதால், வாடகை வசூலிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களில், 16 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதில், கோழிக்கடை உரிமையாளர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கியதால், அவரது கடையில் வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது.

News March 6, 2025

கோரிக்கைகளை அனுப்ப நாளை கடைசி நாள்!

image

ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகளின் கோரிக்கை ஏதேனும் இருப்பின் நாளைக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி-01, என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

News March 6, 2025

கோடைகால சிறப்பு மலை ரயில்: இருக்கைகள் விபரம்

image

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பு 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு 140 இருக்கைகளும்,குன்னூர் முதல் உதகை வரை மொத்தம் 220 இருக்கைகளில் 80 முதல் வகுப்பு இருக்கைகளும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

News March 6, 2025

முதல்வர் மு.க. ஸ்டாலின் நீலகிரி வருகை

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக, அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 

News March 6, 2025

கோடை சீசனை முன்னிட்டு கூடுதல் ரயில் பெட்டி இணைப்பு

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி இடையே தினமும் தலா நான்கு முறை நீலகிரி மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும் குன்னூரில் இருந்து ஊட்டி வரை கூடுதல் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News March 6, 2025

டிகிரி படித்தவர்களுக்கு ரூ.72,040 சம்பளத்தில் வேலை

image

241 ஜூனியர் கோர்ட் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.72,040 வழங்கப்படும்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்<> www.sci.gov.in// <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தின் மூலம் மார்ச் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 6, 2025

பொக்காபுரம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற, மசினகுடி அருள்மிகு பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நாளை துவங்குகிறது. முதலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.ஐந்து நாட்கள் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

News March 6, 2025

நீலகிரியில் வேட்டை கும்பல் கைது 

image

பந்தலுார் அருகே நாடுகாணி பகுதியில் கைது செய்யப்பட்ட வேட்டை கும்பல், தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களது காரில் இரு மாநில நம்பர் பிளேட் இருந்துள்ளது. தொடர்ந்து கேரள மாநிலம் வழிகடவு பகுதியை சேர்ந்த ரெஜி, ரஹமத் அலி,37, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து கார், துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்தனர்.

News March 6, 2025

உதகை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்

image

நீலகிரி மலை ரயில் மார்ச் 28ஆம்  தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்,, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளது. மறு மார்க்கமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 29ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். 

News March 5, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் நாளை (6.3.2025) காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

error: Content is protected !!