India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)

நீலகிரி மாவட்ட பேரூராட்சிகள் புதிய உதவி இயக்குநராக மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும், மணிகண்டன் தனது அரசுப் பணியை கடைநிலை பதவியில் தொடங்கியவர். சிறப்பாக பொதுமக்களுக்கு பணியாற்றுபவர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் 50% மானியத்தில் புல் நறுக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தில் பயன்பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

1)நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

நீலகிரியில் வடக்கு கிழக்கு பருவமழையின் போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, மற்றும் 0423-2450034,
0423-2450035 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 9488700588 எனும் வாட்ஸ் ஆப் எண்ணையும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் அக்.17 நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், ஐடிஐ படித்தவர்கள் என அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க <

பந்தலுார்: உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட்ட, மேசன், எலக்ட்ரீசியன், பெயிண்டர் போன்ற பணிகளுக்கான பயிற்சியும், தினசரி காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு நாள்தோறும், ரூ.800 உதவித் தொகையுடன் ஏழு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி, வயதானவர்களும் பயிற்சி பெற்று அரசு சான்றிதழை பெறுவதற்கு, பயிற்சிக்கு நேரில் அணுகலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கூறுகையில், ”நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகம் தெப்பக்காடு பகுதியில் கடந்த காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது. இந்நோய், மற்ற விலங்குகளுக்கு பரவாது என்பதால், கால்நடை வளர்ப்பவர்கள், பழங்குடியினர் உட்பட மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், பன்றி வளர்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.
Sorry, no posts matched your criteria.