India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா பதவி வகித்து வருகிறார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக எஸ்பி நிஷா உள்ளார். தோட்டக்கலை துறை இணை இயக்குநராக சிபிலா மேரி பணிபுரிந்து வருகிறார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக கீதாவும், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், மாவட்ட நூலக அலுவலர்களாக வசந்த மல்லிகா ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு முக்கிய அரசு துறையில் பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மும்மொழி கொள்கை குறித்து கையெழுத்து பெற்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த, பா.ஜ. விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ல் பா.ஜ., வலுவான கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும். பா.ஜ.வுடன், பிற கட்சிகள் கூட்டணி சேரவிடாமல் தடுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுவருகிறது. கையெழுத்து பெறும் இயக்கத்தில் குறைந்தபட்சம் 1 கோடி பேரிடம் வாங்குவோம் என்றார்.
நீலகிரி குன்னூர் அருகே உள்ள மஞ்சக்கம்பையில் அமைந்துள்ளது அருள்மிகு நாகராஜர் திருக்கோயில். இங்குள்ள மூலஸ்தானத்துகுள் நீண்ட நாட்களாக ஒரு நாகம் உயிரோடு இருப்பதாகவும் அந்த நாகம் அடிக்கடி பக்தர்களுக்கு காட்சி தருகிறது என்றும் நம்பப்படுகிறது. நாக தோஷத்தால் வாழ்க்கையில் தடங்களை சந்திப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வேண்டுக்கொண்டால் விரைவில் நல்லது என்பது நம்பிக்கை. இதை ஷேர் செய்யவும்.
நீலகிரியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க.
நேற்று, கோவையில் இருந்து உதகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மந்தாடா திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சாலையோரத்தில் இருந்த பாறையின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட யாரும் காயம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், வனப்பகுதியில் வறண்டு காய்ந்து கருகி உள்ளது. மேலும், மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பீடி – சிகரெட் போன்றவைகள் வனப்பகுதியில் புகைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஊதியம் ரூ.20,000. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.3.25 ஆகும்.
ஊட்டி அடுத்த தங்காடு ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,67. இவரை வாலிபர் ஏடிசி அருகே ஒருவர் குடிக்க பணம் கேட்டு மிரட்டி கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்து இறந்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஊட்டி மேல் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த சாந்தகுமார்,26, என்பவரை பிடித்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கொலை வழக்கு பதிவு செய்து, சாந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,” ஊட்டியில் நகராட்சி இடங்கள்; ‘பார்க்கிங் தளங்கள்’, நடைபாதைகளில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.அதில், பூங்கா சாலையோர பகுதிகள், கமர்ஷியல் வாணிப ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட்,படகு இல்ல சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை சீசனுக்குள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ளஅறிக்கையில், ‘மீண்டும் மஞ்சப்பை விருது பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றும், சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ம் பரிசு ரூ.5 லட்சம், 3ம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 1.5.25 ஆகும்.
Sorry, no posts matched your criteria.