India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரிய சோலை பகுதியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது. இதில், பள்ளிக்கூடத்தின் தடுப்பு சுவர் இடிந்து ஒரு வீட்டின் சமையலறை மேல் விழுந்தது. இந்நிலையில், இதனை நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா இன்று நேரில் பார்வையிட்டார் . ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. மேலும், பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்று திறனாளி நல துறையின் மூலம், 2021 மே 7 முதல் இதுவரை 1,674 மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், 937 கடும் ஊனமுற்றோருக்கு ரூ.3.71 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு ரூ.18.10 உதவி தொகையும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பகுதிகளில் ஜூன் 19,20,21 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைப்பெறும் நிலையில், இன்று அதன் முதல் நாள் கூட்டம் பந்தலூரில் தொடங்குகிறது. இதற்கு நீலகிரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகிக்கிறார். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குன்னுார் தாலுகாவில் கேத்தி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி உட்பட தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தில் பேரூராட்சி ஊராட்சிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி தேயிலை ஏலத்தில், வரத்து விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. மேலும் 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது.இதனால் 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீ தூள் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. இதன் காரணமானாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நடப்பாண்டு ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஜீவன் ரக் ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியர் தம்பதியின் 15 வயது மகன் ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் காப்பாளராக பணிபுரிந்து வந்த அலிஸ்டர்டிசில்வா(45), அந்த மாணவனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், ஊட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், நிலா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதிர்காடு அடுத்த பெண்ணை பகுதியில் இன்று இரவு காட்டுநாயக்கன் ( பழங்குடியினர்) பிரிவை சார்ந்த கண்ணன் என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பல மாதங்களாக இப்பகுதியில் யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதகை அருகே தலைகுந்தா என்ற இடத்தில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடி செல்லும் கல்லட்டி மலை வழி சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவதால் ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரில் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.