India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஊட்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்துக்காக பொதுமக்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இதற்கு தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் தினசரி பணிக்கு செல்வது வழக்கம். இந்ந நிலையில் கோத்தகிரி அருகே டி.மணியட்டி பகுதியில் நேற்று பட்டபகலில் புலி நடமாடியது. இதனை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் திரும்பி சென்றனர். இத்தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல்காதர் அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதில் அரசு வழக்கறிஞர் கூறும்போது, கொலை நடந்தவுடன் கனகராஜின் போனிற்கு வெளிநாட்டு மொபைல் போனிலிருந்து 5 அழைப்பு வந்துள்ளதால், அதை கண்டறிய இன்டர்போல் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சமீப காலமாக பெண்கள் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி என வாகனங்கள் ஓட்டி அசத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைப்பெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில், நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா 3 திருநங்கை பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை இன்று வழங்கினார்.
கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 19) தொடங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. முதல்நாளில் அடிப்படை வசதி கேட்டு 75 மனுக்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2ஆம் நாளான நேற்று 191 என மொத்தம் 266 மனுக்கள் பெறப்பட்டன. கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மனுக்களை பெற்றார். மேலும், இதில் வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
உதகை நகராட்சிக்குள்பட்ட 32 மற்றும் 33-ஆவது வாா்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தாா் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை( ஜூன்.21) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கூடுதல் ஆட்சியர் வளாகம் பிங்கர்போஸ்ட் ஊட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட செப்போடு பகுதியை சேர்ந்த சென்னா (74) என்பவரை நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதல் கட்ட இழப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரம், மீதமுள்ள ரூ.9.50 லட்சத்தை காசோலையாக அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் நேற்று வழங்கினர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் நாளை மறுநாள் (21.6.24 ) நீலகிரி வரும் நிலையில், மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. அவருக்கு மதியம் 2 மணிக்கு கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலும், மாலை 5 மணிக்கு உதகை சேரிங்கிராசிலும், மாலை 7 மணிக்கு குன்னூர் பேருந்து நிலையத்திலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Sorry, no posts matched your criteria.