Thenilgiris

News December 18, 2024

நீலகிரி காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News December 18, 2024

காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டிய வனத்துறை

image

கூடலூர் சேரம்பாடி, பிதர்காடு சரக பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளையும் சேதப்படுத்தி கொண்டிருக்கும் CT16 எனும் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணிக்காக இன்று கள இயக்குனர் , முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், சேரம்பாடி, பிதர்காடு , அதி விரைவு படை ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டப்பட்டது.

News December 18, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.கைவினை திட்டத்தில் ரூ. 3 இலட்சம் வரை மானிய கடன்
2.மக்கள் குறை கேட்ட தமிழக கொறடா
3.7 வீடு இடிப்பு : ட்ரோன் மூலம் கண்காணிப்பு
4.குன்னூரில் நடுரோட்டில் காட்டு எருமைகள் சண்டை
5.ரூ.3.80 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

News December 18, 2024

கைவினை திட்டத்தில் ரூ. 3 இலட்சம் வரை மானிய கடன்

image

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் மானிய கடன் உதவி பெறலாம். பிணையற்ற கடன் உதவி ரூ. 3 இலட்சம் வரை , ரூ.50 ஆயிரம் வரை மானியம் , 5 சதவீதம் வரை வட்டி மானியம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது .இதற்கு www msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

மக்கள் குறை கேட்ட தமிழக கொறடா

image

குன்னூர் சட்டமன்ற தொகுதி மக்கள் தங்கள் குறைகளை எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான ராமசந்திரனை அவரது குன்னூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சந்தித்து குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அவைகளை அவர்களிடம் இருந்து பெற்று, கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News December 18, 2024

ரூ.3.80 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

News December 18, 2024

ஊட்டியில் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம் கூடுதல் ஆட்சியர் வளாகம் பிங்கர் போஸ்ட் ஊட்டியில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தனியார் துறை நிறுவனங்கள் கொள்கின்றன என்றார்.

News December 18, 2024

கடன் பெற்று தொழில் துவங்க ஆட்சியர் அழைப்பு

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்ட செய்தியில், ‘மாவட்டத்தில் கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினை திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தில் மூன்று லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி மற்றும் ரூ 50,000 வரை மானியம் பெறலாம். வட்டி மானியம், மற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்’ என்றார்.

News December 18, 2024

நீலகிரி கலெக்டர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டம் உள்ளதால் இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் பொறியியல் துறையின் இ-வாடகை செயலியின் மூலம் விவசாயிகள் பதிவுசெய்து குறைந்த விலையில் வேளாண் கருவிகளை வாடகைக்கு எடுக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News December 18, 2024

நீலகிரியில் ராஜினாமா: பரபரப்பு புகார்

image

நீலகிரி மலை ரயிலுக்கான கூட்டு ஆலோசனை குழு செயல்படாமல் உள்ளதாக கூறி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர் தர்மலிங்கம் வேணுகோபால், தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அவர் கூறுகையில், ‘உறுப்பினர் பதவி வழங்கி, 2 மாதங்கள் கடந்தும், ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால், ராஜினாமா செய்தேன்,’ என்றார்.

error: Content is protected !!