India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மஞ்சூர் காந்தி சேவா அறக்கட்டளை செயலாளர் கே.கே. போஜன் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், ‘நீலகிரி மக்கள் தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனவே நீலகிரி தேயிலைக்கு நிரந்தர விலையை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.
நீலகிரியில் கனமழை காரணமாக
உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இருந்தாலும் எந்தவிதமான வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக, உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு நேற்று வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த 2 நாட்களாக உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக வாகன போக்குவரத்து தடைபட்டது. நேற்று வெள்ளம் வடிந்ததால் வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அந்த பகுதியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌசிக் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
நீலகிரி எம்பி தொகுதியின் முகாம் அலுவலகத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை 9.30 மணிக்கு வருகைபுரிவதாக நீலகிரி பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் அறிவித்துள்ளார். காலை 10.30 முதல் 12 மணி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் நீலகிரி எம்பி தொகுதிக்குட்பட்ட இடங்களில் மக்களைச் சந்திக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் லவ்டேல் ரயில் நிலையம் அருகே இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு ரயில் பாதையின் குறுக்கே விழுந்தது. அதனால் ரயில் லவ்டேல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் மரத்தை வெட்டி அகற்ற 5 மணி நேரம் ஆகும் என்றதால், பயணிகளை பேருந்தில் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.