India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் தோட்டக்கலை துறை பராமரித்து வரும் பூங்கா செயல்பட்டு வரும் நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க, விரிவாக்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தில், ‘பூங்காவிற்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் விரிவு படுத்த வேண்டும்’ என நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.

குன்னூர் அருகே குரும்பாடி புதுகுகாடு அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியின் மேல் பகுதியில் உள்ள நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி, விதிகளை மீறி மரங்களை வெட்டி தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் மலையின் கீழ்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூர் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மா.செ. கப்பச்சி வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்துக்கு கூடலூா் நகர அதிமுக செயலாளா் செய்யது, ஒன்றியச் செயலாளா் பத்மநாபன் முன்னிலை ஆகியோர் வகித்தனர்.

ஊட்டி அருகே இத்தலார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் வீட்டில் தீமூட்டி குளிர் காய்ந்துள்ளார். வீட்டில் இவரது மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4), உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் தங்கியிருந்தனர். புகைமூட்டத்தில் வீட்டில் அனைவரும் மயங்கினர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குந்தா ரேஞ்சில் உள்ள எடக்காடு அரையட்டி பகுதியில் இன்று மாலை சிறுத்தை தாக்கி ஆண் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள், காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2023 ல் கோவை காவல் சரகத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 151 பேர் கைது செய்ய பட்டனர். இந்த நிலையில் 2024 ல் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 250 பேரில், நீலகிரி மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்.

2023 ல் கோவை காவல் சரகத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 151 பேர் கைது செய்ய பட்டனர். இந்த நிலையில் 2024 ல் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 250 பேரில், நீலகிரி மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்.

காவலர் குறை கேட்கும் முகாம், ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள, குழந்தைகள் அரங்கில் நடைபெற்றது. இதில் காவலர்கள் தங்கள் குறைகளை தனித்தனியாக விவரித்தனர். மேலும் காவலர் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நீலகிரி காவல்துறை சார்பில், குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர, வாகன வசதியை நீலகிரி எஸ்பி நிஷா செய்தார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் வசித்து வரும், சந்திர சேகர் என்பவரது வீட்டு வளாகத்தில், இரவு சிறுத்தை புகுந்து, வளர்ப்பு நாயை கொன்று, தூக்கி சென்றுள்ளது. தகவல் அறிந்த ஊட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஊட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக, குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வரும் சம்பவங்கள், அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.