India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தி்ல் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தி்ல் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதியில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் சேவை ஐந்து முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாகவும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் மலை ரயிலில் பயணிக்கும் பாதையில் பல இடங்களில் மரங்கள் பாதையின் குறுக்கே விழுந்துள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக எல்லை ஓரங்களில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளா தண்டர் போஸ்ட் படை, கர்நாடகா சிறப்பு அதிரடி போலீசார் இணைந்து எல்லையோர வன பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நக்சல் மனோஜ் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு பகுதியிலும் தேடல் விரிவு படுத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் நீலகிரி எம்பி, மாஸ்டர் மதன் இறுதி சடங்கு நிகழ்வில், ஜார்கண்ட் கவர்னர் சி.பி. ராதா கருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் வாசன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நித்தியானந்தா மின் மயானத்தில் உடல் தகனம் நடந்தது.
நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையைச் சார்ந்த 450 பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றனது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீலகிரி மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மாதன் இறுதி சடங்கு பாலாஜி நகர் இல்லத்தில் நடந்தது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், ஆன்மீக துணை தலைவர் கமல் உள்பட திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ தீவிரமடைந்து பலப்பகுதிகளில் மண்ணரிப்பு, மரம் சாய்ந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 முதல் 11 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.