Thenilgiris

News July 30, 2024

கால்நடைகளால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி 

image

குன்னூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் வளர்ப்பு கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் சாலை விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில், சாலையில் சுற்றித் திரியும் வளர்ப்பு கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News July 30, 2024

வயநாடு நிலச்சரிவு: நீலகிரியை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டத்தை அடுத்த கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பர் உயிரிழந்ததார். இந்நிலையில் தற்போது பந்தலூர் தாலூகா அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த கல்யாண குமார் என்பவரும் உயிரிழந்துள்ளார். 

News July 30, 2024

மாயாறு அணையை தூர்வாரும் பணி மும்முரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயாறு அணையை தூர்வாரும் பணி கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து அணையின் தடுப்பு கதவுகள் சீரமைக்கப்பட்டது. மேலும், அணையின் மையப்பகுதியில் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 வாரங்களுக்குள் நிறைவு பெரும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை தூர்வாரப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 30, 2024

தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு 

image

உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. இதனால் தேலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ச்சி இருந்தது. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். உதகை, சோலூர், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

News July 30, 2024

வயநாடு நிலச்சரிவு: கூடலூரை சேர்ந்தவர் உயிரிழப்பு 

image

கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, புளியம்பாறை பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது உடல் தற்போது விம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இவர் உயிரிழந்ததை அறிந்த புளியம்பாறை பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News July 30, 2024

நீலகிரி: சவுக்கு சங்கர் மீது இத்தனை வழக்குகளா?

image

ஊட்டி புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி புகாரின்பேரில் நேற்று யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 24 மணி நேர போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வக்கீல் பாலநந்த குமார் இன்று கூறுகையில், சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் 17 வழக்குகள் உள்ளன என குறிப்பிட்டார்.

News July 30, 2024

நீலகிரியில் மிக மிக கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதையொட்டி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று மிக மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

News July 30, 2024

மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சவுக்கு சங்கர் ஆஜர்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழினியன் யூடியூபர் சவுக்கு சங்கரை 24 மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும், இன்று (30.7.24) மாலை 5 மணிக்கு சவுக்கு சங்கரை மருத்து பரிசோதனை செய்தபின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

News July 30, 2024

நீலகிரியில் மிகமிக பலத்த மழை பதிவு

image

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிகமிக பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரியில் உள்ள மின்ட்வொர்த் எஸ்டேட் பகுதியில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

நீலகிரியில் இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு அறிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை நேற்றே விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவிலிருந்து மழை கொட்டித் தீர்த்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!