India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில், சாலை வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, அதிநவீன வசதிகளுடன் 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
➤ நீலகிரியில் காட்டு யானை பலி – ஒருவர் கைது
➤ பழங்குடி மக்களுக்கு அரசு மருத்துவமனையில் 50 படுக்கை கொண்ட தனி பிரிவு அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி
➤ இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்
➤குன்னூரில் வளர்ப்பு நாயை கொன்ற மர்ம விலங்கு
➤உதகையில் ஆகஸ்ட் 16 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நீலகிரி ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு &தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உதகை பிங்கர்போஸ்ட் அருகே உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி வெள்ளி அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெறவுள்ளன. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.
உதகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலா துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள் , வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
தன்னலம் கருதாமல் முதலுதவி சிகிச்சை வழங்கிய செவிலியர் சபீனாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.
நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர், குன்னூர் பகுதிகளில் இதுவரை விழுந்த 300 மரங்களை தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றினர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி, குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்கள் குறித்து தகவல் தரும்படி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், குந்தா, பந்தலூர், கோத்தகிரி உள்பட பெரும்பாலான பகுதிகளில் இன்று பனி மூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, நீலகிரி மாவட்டம் தலைவர் முகமது பாரூக் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நடப்பாண்டு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த பூர்வகுடி மக்களின் சர்வதேச தின விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், “ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 100 படுக்கை வசதி உள்ள நிலையில் பழங்குடி மக்களுக்கு 50 படுக்கை வசதி கொண்ட தனி பிரிவு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த தம்பகுதியினர் பிரதீப் – சங்கீதா. இவர்களது 2 வயது குழந்தை ரக்சித் ரிகான், கடந்த 6 மாதங்களாக வீட்டை சுற்றி மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை கவனித்த அவரது பெற்றோர் குழி எடுத்தும் மரக்கன்றுகளை கொடுத்தும் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் இதுவரை சிறுவன் 54 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய காட்டு யானை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிந்து, தலைமறைவான தோட்டக்காரரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தோட்டக்காரர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.