India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேலே பதிவிடப்பட்ட செய்தி தவறான செய்தி ஆகும். இது குடும்பத்தகராறில் நடந்த கொலை என்றும், கஞ்சா போதையில் கொலை நடக்கவில்லை என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், கொலையாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்னூர் தேயிலை வாரிய மண்டல இயக்குனர்கள் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்து வர்த்தகத்துறை உயர் அதிகாரி ராய் பேசினார். மேலும், மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் பேசுகையில், ” நீலகிரியில் பசுந்தேயிலைக்கு வழங்கப்படும் சராசரியாக ஒரு கிலோ ரூ.15 விலை கட்டுப்படி இல்லை. குறைந்தபட்ச விலை ரூ.35 வழங்க வேண்டும் என்றார்.
நீலகிரி உதகை புதுமந்து பகுதியில் காவல்துறை காவலர்களுக்கான 120 குடியிருப்புகள் உள்ளன. அங்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா இன்று பார்வையிட்டார். அப்போது, காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடினார். காவலர்கள் குடியிருப்பு பகுதிக்கு முதன்முறையாக ஒரு காவல் கண்காணிப்பாளர் வருகை மகிழ்வாக உள்ளது என்று காவலர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும், காவலர்களிடமும் குறைகளை கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று உதகையில் பகுதியில் உள்ள காவலர்கள் குடும்பத்தினரை அவர்களது குடியிருப்புக்கு சென்று சந்தித்ததுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.
கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்த சினோய் (26), இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தம்பி ராகுலை (19) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலை மறைவு ஆனார். இது தொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சினோயை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்த சினோய் (26), இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தம்பி ராகுலை (19) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலை மறைவு ஆனார். இது தொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சினோயை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக #IMD தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றைய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், மாவட்ட விவசாயிகள் விளைவிக்கும் உருளை கிழங்கு மற்றும் பூண்டு போன்றவற்றை ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இன்று (26.8.24) நடந்த ஏலத்தில் முதல் ரக உருளைகிழங்கு 1 கிலோ ரூ.56-க்கு விற்பனையானது. இது கடந்த வாரத்தை (ஆகஸ்ட் 19ஆம் தேதி) விட ரூ.12 அதிகமாகும்.
கோத்தகிரி ராம்சந்து பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் இன்று எஸ்ஐ வனகுமார் தலைமையில் போலீசார் கல்பனா காட்டேஜ் பகுதியில் நோட்டமிட்டனர். அப்போது அங்கு ஜோஸ்குமார் (46) என்பவரும், டானிங்டன் பகுதியில் மணி (72) என்பவரும் லாட்டரி விற்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பொதுவான நடைமுறை மற்றும் சம்பவங்கள் குறித்து நேரில் ஆராய்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று குந்தா தாலுகாவில் உள்ள மஞ்சூர் சென்று அப்பகுதி மக்களிடம் குறை, நிறைகளை கேட்டு அறிந்தார்.
Sorry, no posts matched your criteria.