India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு உதகை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக, உதகை காவல் ஆய்வாளர் அல்லிராணி கொடுத்த வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு தற்போது ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகை , காபி ஹவுஸ் சந்திப்பில் இன்று காவல் துறை சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தராஜன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், மஞ்சுநாத், மாணவிகள் பிரகலதா, நிஷாந்தினி, பத்மஸ்ரீ, தர்ஷினி, மோனிகா ஆகியோர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியிலிருந்து, மாயார் செல்லும் சாலையில் சிக்கம்மன் கோயில் அருகே இன்று தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாக பரிதவித்து வருகிறது. இந்நிலையில், யானையை கண்டறிந்து குட்டியுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ட்ரான் கேமரா உதவியுடன் அருகில் எங்காவது தாய் யானை உள்ளதா என்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வன சரகத்தில் உள்ள ஆவரள்ளா காட்டு பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதைத் தொடர்ந்து, மசினகுடி துணை இயக்குநர் அருண்குமார் தலைமையில் நேற்று கால்நடை மருத்துவர் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து, அந்த சிறுத்தை வயது மூப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நாளை 13-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை மறுநாள் 14-ம் தேதி, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அங்குள்ள ஒரு பானிபூரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது, 25 வயது வாலிபர் அவரை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்றைய தினம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் காய்கறி கடை வைத்திருப்பர் முருகேசன் (55). இவரது கடைக்கு 10 ஆம் வகுப்பு மாணவி அடிக்கடி காய்கறி வாங்கி சென்று உள்ளார். அப்போது, மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து நேற்று முருகேசனை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் தடை என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.