India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டியில் தொடர் மழை காரணமாக அரசின் பல்வேறு கட்டுமான பணிகள் முடிவதில் தாமதம் ஆகி வருகிறது. இதே போன்று கோத்தகிரி – ஊட்டி முக்கிய சாலையில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு பிரியும் சாலையின் பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாளை (20.8.24 முதல் 22.8.24 வரை) 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தெய்வீக, கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விநாயகர் சிலை வடிவமைக்கும் போட்டி நடைபெறவுள்ளது. வடிவமைத்த சிலையை செப்.1 முதல் 4 தேதிக்குள் உபதலை கிராமத்தில் உள்ள சாய் நிவாஸ் ஆசிரமத்தில் சமர்பிக்க வேண்டும் என்று குரு நவீன் சாய் அறிவித்துள்ளார். இதில், முதல் பரிசு ரூ.50,000, 2வது ரூ.10,000, 3வது பரிசு ரூ.7500 வழங்கப்படுகிறது.
நீலகிரி வன பகுதியில் யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட 35 தனியார் விடுதிகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்டு நீதிபதி வெங்கட்ராமன் கமிட்டி அறிக்கையின்படி, வழித்தட விடுதிகளை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என விடுதியாளர்களுக்கு நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாமாவட்டத்தில் கிழங்கு, கேரட் உள்ளிட்ட மழை காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், மாவட்டத்தின் பல இடங்களில் சிறிய அளவிலான விலை நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள், புருக்கோலி எனப்படும் காலிபிளவர் வகையைச் சார்ந்த காய்கறியை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் கட்டுபடியாகக் கூடிய நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்திரவின் பேரில் கூடலூர், குன்னூர், கோத்தகிரி கோட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை அப்பகுதி டிஎஸ்பிகள் நேற்று (18ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி முனிஸ்வரன் கோவில் அருகே குன்னூரில் இருந்து சென்ற கார். சாலையில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது நல்வாய்ப்பாக வாகனத்தில் பயணித்த நபர்கள் இருவருக்கும் எந்த காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர் குன்னூர் நகர காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி: ஊட்டி அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நீலகிரி எஸ்.பி., நிஷா ஆய்வு மேற்கொண்டார். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சசம்பவத்தின் எதிரொலியாக சேட் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் நீலகிரி மாவட்ட எஸ்.பி., என்.எஸ். நிஷா நேரில் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்திரவுப்படி இன்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.