Thenilgiris

News August 25, 2024

நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

image

உதகையில் நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் வரவேற்றார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் நகரங்கள், ஒன்றிய பகுதிகளில் கழக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர்கள்  ரவிக்குமார், லட்சுமி, பொருளாளர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 25, 2024

உதகையில் மிசோரம் அதிகாரிகள் ஆய்வு 

image

உதகை, மார்க்கெட்டில்  நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க காய்கறி  ஏல விற்பனை மையம் உள்ளது. அங்கு மிசோரம் மாநில தோட்டக்கலை துறை சிறப்பு செயலர் ராம்தின்லைனி தலைமையில் தோட்டகலை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், காய்கறி ஏல விற்பனையை நேற்று (24-தேதி) பார்வையிட்டனர். நீலகிரி கூட்டுறவு  இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் முத்துகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

News August 25, 2024

புலி நகம், பல் விற்பனை செய்ய திட்டம்

image

கூடலூர் பிதர்காடு பகுதி தேயிலை தோட்டத்தில் 2 புலிகள் பலியான வழக்கில் கைதான வட மாநில தொழிலாளர்கள் 3 பேரிடம் நேற்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் புலிகளின் நகம், பல் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக விஷம் வைத்தது தெரிய வந்தது. மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் பெரிய கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2024

நீலகிரி: நற்பணி புரிந்த காவலர்களுக்கு பாராட்டு

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கெளரவித்து வருகிறது. அந்தவகையில் இன்று நற்பணி புரிந்த காவலர்களுக்கு கோவை சரக காவல்துறை துணை தலைவர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா பங்கேற்றார்.

News August 24, 2024

திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருக்கு வரவேற்பு 

image

முன்னாள் முதல்வர் கருணாதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘என் உயிரினும் மேலான’ என்ற நீலகிரி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு, திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் மேலிட பார்வையாளராக வருகை புரிந்தார். அவரை நீலகிரி திமுக செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்

News August 24, 2024

நீலகிரி: விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 12 வயது முதல் 35 வரை அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள் நாளை 25ஆம் தேதி என்றும் ஆர்வம் உள்ளவர்கள் https:/sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

உதகை  தொட்டபெட்டா மலைக்கு செல்ல இன்றும் தடை

image

உதகை அருகே தொட்டபெட்டா  சாலையில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க பாஸ்ட் டிரேக் அமைப்பு வேலை நடைபெறுவதை முன்னிட்டு கடந்த 20 தேதி முதல் 23 தேதி வரை  சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  மேலும் இன்று  24 தேதி வேலை தொடர்வதால்  தொட்டபெட்டாவுக்கு   சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே நாளை 25 தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என வன துறையினா் தெரிவித்துள்ளனா்.

News August 24, 2024

இரட்டை புலிகள் இறப்பு மூன்று பேர் கைது

image

பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றி உடலை உட்கொண்ட, 2 புலிகள் பலியாகின. இதை அடுத்து வனத்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். அதில், எஸ்டேட் தொழிலாளர்களாக பணிபுரிந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த, சூரியநாத் பராக் (35), அமன் கொயாலா (24), சுபித் நன்வார் (25) ஆகியோர்களை வனசட்டத்தில் கைது செய்தனர்.

News August 23, 2024

நீலகிரி: மின் விநியோக பாதிப்பை தடுக்க திட்டம்

image

நீலகிரி: ஊட்டி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் உதகை பார்சன் வேலி அணையை தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதி மொழி குழு தலைவர் வேல்முருகன் தலமையில் குழு உறுப்பினர்கள் நேற்று பார்வையிட்டனர். அப்போது மழை, புயல் காலத்தில் மரம் விழுந்து ஏற்படும் மின் விநியோக பாதிப்பை தடுக்க ரூ.6 கோடியில் புதிய திட்டம் உள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.

News August 23, 2024

நீலகிரி: வனத்துறையினர் 3வது நாளாக விசாரணை

image

நீலகிரி: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 20ம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய சோதனையில், விஷமருந்தி ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்ததும். அந்த பன்றியின் இறைச்சியை புலிகள் தின்றதால் இறந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக வனத்துறையின் 3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!