India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பதவி ஏற்ற முதல் நாளில் இருந்து, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பொதுவான நடைமுறை மற்றும் சம்பவங்கள் குறித்து நேரில் ஆராய்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று குந்தா தாலுகாவில் உள்ள மஞ்சூர் சென்று அப்பகுதி மக்களிடம் குறை, நிறைகளை கேட்டு அறிந்தார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி தேவாலா, வுட் பிரையர் எஸ்டேட் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி: உதகையில் NSPCA அமைப்பு இயக்குநர் பிரேமா, 50 நாய்களை வளர்த்து வருகிறார். வீதிகளில் ஆதரவற்று இருக்கும் நாய்களை தன் பொறுப்பில் ஏற்று, மருத்துவ வசதி வழங்கி, தனி இடத்தில் உணவு வழங்கி பாதுகாத்து வருகிறார். இதுவரை சுமார் 1000 நாய்களுக்கு மருத்துவ வசதி வழங்கி காப்பாற்றி உள்ளார். இந்நிலையில் இன்று சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரேமா அவர்களுக்கு பிராணிகள் நல ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் டாக்டர் ஜுபைர்கான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் இரா.அன்வர்கான் (குன்னூர்) பங்கேற்றார். அவருடன் குன்னூர் கிளை செயலாளர் எம்.ஏ.ரகீம், இளைஞரணி சாதிக் பாட்ஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வரும் உல்லாச பயணிகள் காண வரும் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக மூடிவைக்கப்பட்டு இருந்தது. பயணிகளின் கூட்டம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் தொட்டபெட்டா செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்தவர் ராகுல் (19). இவரது அண்ணன் சினோய் (26) குடிபோதையில் தந்தையை தாக்கியதை ராகுல் கண்டித்து தடுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சியோனை தேடி வருகிறார்கள்.
உபதலை சாய் நிவாஸ் ஆனந்தாமிர்தம் அரங்கில் இன்று காலை முதல் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஜல அபிஷேகம், திரவியங்கள் அபிஷேகம் உட்பட பூஜைகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு சுவாமி தத்வன சைத்தன்யா மற்றும் பால வித்யா விகாஸ் குழந்தைகளின் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி சிறப்பு பக்தி பாடல்கள் நடைபெறுகிறது. மதியம் 1.40 மணிக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
கூடலூர் நகரில் மாணவர்கள் பள்ளி வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் பள்ளி, கல்லூரி செயல்படும் நாட்களில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை கன ரக வாகனங்கள் இயக்க போலீஸார் தடை விதித்து உள்ளனர்.
தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நீலகிரியில் விளையும் மலை பூண்டு தரம், மணம், ருசி கொண்டதாக உள்ளதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இன்று (25.8.24) நடைபெற்ற பூண்டு ஏலத்தில், முதல் ரகம் அதிக பட்சமாக 1 கிலோ ரூ.470க்கு விற்பனையானது. குறைந்த பட்ச விலையாக 1 கிலோ ரூ.360க்கு விற்பனையானது.
Sorry, no posts matched your criteria.