India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07/02/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

உதகை , குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கான அடிப்படை பயிற்சி 9-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் தொழிற்சாலைகள் , மருத்துவமனைகள் , அடுக்குமாடி குடியிருப்புகள் , மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள் சேரலாம். இந்த தகவலை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: ‘<

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், கடந்த நவம்பர் மாதம் தோட்ட கலைத்துறை சார்பில் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கருப்பு நிற கேரட் விதைகள் விதைக்கப்பட்டு தற்போது முதன்முறையாக அறுவடைக்கு தயாராகியுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில் சோதனை முயற்சியாக விதைக்கப்பட்டு வருகிறது, மார்ச் 15க்கு பிறகு அறுவடைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

நீலகிரி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (6/2/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.