India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்த நிலையில் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மாணவர்களை சீருடையின்றி பள்ளிக்கு வர உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு டெபுட்டி ஏரியா கமாண்டர் பணிக்கான காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தெரிவித்துள்ளார். 21 வயதில் இருந்து 50 வயதுக்குள் உள்ள பட்டபடிப்பு படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கவுரவ பதவி என்பதால் ஊதியம் எதுவும் வழங்கப்படாது. விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரத்தை 25ம் தேதிக்குள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
நாளைய தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கூடலூர் பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொலைதூர பகுதியில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் வருவதற்கு கூடலூர் பெரிய சோலை பகுதியில் இருந்தும் காலை ஏழு மணிக்கு, தாளூர் பகுதியிலிருந்து ஏழு மணிக்கு பேருந்து எடுக்கப்பட்டு இருப்பினும் காலை 8.30 மணிக்கு வந்தடையும் அளவில் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக கூடலூர் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் மலை காய்கறிகள் மற்றும் மலை பயிர்களுக்கு விதை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் சுந்தர வடிவேல் தோட்டக்கலை இயக்குனர் (பொறுப்பு) அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் லட்சுமிபவ்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதி நடைபெறவிருந்த முகாம் அன்று மிலாது நபி அரசு விடுமுறை என்பதால் 16ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் புருசெல்லீஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் இம்மாதம் 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 4 மாதம் முதல் 8 மாத வயது கன்று குட்டிகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இத்தடுப்பூசி செலுத்தினால் ஆயுள் முழுதும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகள், வளர்ப்பு நாய்களை வேட்டையாடி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேத்தி, ராஜ்குமார் நகரில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது. மேலும், சாலையில் உலா வருவது போல் சிறுத்தை வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் சார்பில் இம்மாதம் வருகிற 20-ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என்பதால் ஆர்வம் உள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 14ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30. வரை நடக்கிறது. தேர்வில் 3610 பேர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வை முறையாக தடையின்றி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.