Thenilgiris

News October 17, 2024

நீலகிரி சோதனை சாவடிகளில் சோதனை தீவிரம்

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நேற்று கறுகையில், “சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் வன விலங்கு வேட்டை கும்பலிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேலும் தீவிர படுத்த பட்டுள்ளது” என்றார். அப்போது கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன் உடனிருந்தார்.

News October 17, 2024

முதுமலை மிகாமில் யானைகுட்டி உயிரிழப்பு

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு, முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை குட்டியின் உடல்நிலை குன்றிய நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் கள இயக்குநர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் துணை இயக்குநர் அறிவுரைப்படி பிரேத பரிசோதனைக்குப் பிறகு அங்கு புதைக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

நீலகிரியில் 449.8 மி.மீ மழை பதிவு

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம்: ஊட்டி – 18.8 மிமீ, குந்தா தாலுகா எமரால்டு பகுதிகளில்- 22 மிமீ, குன்னூர், கேத்தி பகுதிகளில் 31 மிமீ, கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 62 மிமீ, கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 7 மிமீ என கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 449.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News October 17, 2024

நீலகிரி: தேயிலை வாரிய கல்வி உதவி தொகை வேண்டுமா ?

image

நீலகிரி தேயிலை விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக, வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கபடும் மாணவ, மாணவியர்கள் பள்ளி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10,000மும், கல்லூரி படிப்புக்கு ரூ.20,000மும் வழங்கபடும். இதை பெற https//serviceonline.gov.in என்ற இணையதளத்தில் 15.10.24 முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க டீ போர்டு துணை தலைவர் ராஜேஷ் சந்தர் அறிவித்துள்ளார்.

News October 16, 2024

உதகையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

image

உதகை புத்தகத் திருவிழா 18.10.2024 முதல் 27.10.2024 வரை
காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இந்த நிகழ்ச்சியில் கலை, இலக்கிய சொற்பொழிவுகள், உணவரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 16, 2024

போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம் !

image

நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பாக சிறுவர் மன்றத்தில் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து தயக்கம் இன்றி அவர்கள் பயின்று வரும் அந்தந்த கல்லூரிகளுக்கு என்று “போலீஸ் அக்கா” என்ற திட்டத்தின் கீழ் நியமிக்கபட்டுள்ள காவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா துவக்கி வைத்தார்.

News October 16, 2024

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி அறிவுரை

image

நீலகிரியில் பருவமழை காற்றுடன் தொடங்கி, பெய்து வரும் நிலையில், சாலை ஓர மரங்கள் ஒடிந்தும், பாறைகள் உருண்டும் ரோட்டில் விழுந்து தடை ஏற்படும் நிலை உள்ளது. பேரிடர் தடுப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். எனவே, வெளியூர், உள்ளூர் வாகன ஓட்டிகள் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும் என எஸ்.பி நிஷா கேட்டு கொண்டுள்ளார்.

News October 16, 2024

நீலகிரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.10.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.சிறப்பு அம்சங்கள்:இம்முகாமில் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News October 16, 2024

நீலகிரியில் இயற்கை விவசாயிகளுக்கு பரிசு

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் சிறந்த விவசாயிகளுக்கு ஊக்கதொகை வழங்கும் திட்டத்தின்கீழ் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ஆவது பரிசு ரூ.60,000, 3ஆவது பரிசு ரூ.40,000 என வழங்கபடும். விருப்பம் உள்ள விவசாயிகள் தோட்டக்கலை இணையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தோட்டகலை அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

News October 16, 2024

நீலகிரியில் மழை பேரிடர் குறித்த உதவி எண்கள் வெளியீடு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மழையால் பேரிடர்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவிகள் பெறவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!