Thenilgiris

News April 9, 2025

நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் 

image

மகாவீர் ஜெயந்தி தினம் நாளை கடைபிடிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் கிளப் பார்கள் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடவேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.பார்கள் ஏதேனும் திறந்திருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

News April 9, 2025

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெலிங்டன் வருகை

image

குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய துறைகளில் உள்ள அதிகாரிகள் பயின்று வருகின்றனர். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை புரியும் நிலையில் இராணுவ மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

News April 9, 2025

நீலகிரியில் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சியர் 0423-2442344▶️மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839 ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0423-2441233 ▶️திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்-0423-2443805 ▶️திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை- 0423-2442053▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 0423-2444004 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 9, 2025

நீலகிரியில் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்

image

தேவர்சோலை பேரூராட்சி, கம்பாடி , கோளூர், பாடந்துறை பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில், ‘சக்கச்சி வயல்’ என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உறக்கத்தைத் தொலைத்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

News April 8, 2025

உதகையில் மத்திய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

image

உதகையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உதகை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.மமுருகனுக்கு சேரிங்கிராஸ் பகுதியில் பாண்டு வாத்திய இசை முழங்க நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ . தருமன் அமைச்சர் ஏ .முருகன் அவர்களுக்கு ஜவ்வாது மாலை அணிவித்து வரவேற்றார் . முன்னாள் மாவட்ட தலைவர் , தற்போதைய மாவட்ட தலைவர் மோகன் ராஜ் , தமிழ்நாடு பாஜக நிர்வாக குழு உறுப்பினர் சபிதா போஜன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்கள்.

News April 8, 2025

நீலகிரி: கலெக்டர் தலைமையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

image

பந்தலூர் பகுதி உப்பட்டி, பாரத் மாதா மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நாளை 9ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் அரசு துறை சார்ந்த குறைகளை விண்ணப்பங்கள் மூலம் கொடுக்கலாம் என்று வருவாய் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

11-ம் வகுப்பு மாணவியின் ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன்

image

குன்னூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவன், அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த மாணவன் மாணவியின் ஆபாச வீடியோவை  சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2025

மலைகளின் மடியில் ஒரு முருகன் ஆலயம்!

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 8, 2025

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிப்பு

image

ஊட்டி சீசனை அடுத்து கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் வார இறுதியில் மட்டும் அல்லாமல் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் நாடுகாணி, சேரம்பாடி வனப்பகுதி சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு கழிவுகளை நிரப்பி வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்கு மற்றும் சுற்று சூழல் பாதித்து வருகிறது.

News April 7, 2025

பளு தூக்கும் வீரருக்கு பாராட்டு 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஏப்.07) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தும்மனட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் சரவணன் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!