India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடிக்காத உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான பாசிபடர்ந்த பாறையில் வழுக்கி விழுந்து, கடந்த காலங்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே தற்போது நீர்வீழ்ச்சி பகுதிக்கு,சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல கூடாது, என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (17.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.
1. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்க்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
2. குன்னூர் கிளை நூலகம் அருகே மண் சரிவு
3. அருவங்காட்டில் நடிப்பு பயிற்சி பட்டறை நிறைவு நாள் விழா
4. முள்ளிகொர கிறிஸ்து அரசர் ஆலய ஆண்டு விழா
5. அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வாக்குச்சாவடியில் ஆய்வு
6. பழங்குடியின மக்களுக்கு கூட்டுறவுத்துறை மருத்துவ முகாம்
குன்னூர் கிளை நூலகம் மற்றும் அங்கன்வாடி மையத்தின் அருகில் நேற்று பெய்த கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இன்று காலை 7 மணி முதல் நகராட்சி பணியாளர்கள் ,லாரி ஜே சி பி இயந்திரத்தின் மூலம் மண்கள் அகற்றப்பட்டு பாதை சீர் செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகளை அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன் மேற்பார்வையில் உடனிருந்து மேற்கொண்டார்.
நீலகிர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர், கூடலூர் ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் கட்சியின் மாவட்ட, வட்டார, கிளை நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி பிறந்த தின வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் அரசு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு விட 2406 பேர் குறைவாக சேர்ந்துள்ளனர். இதற்கிடையே மேலும் ஒரு பிரச்சனையாக பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4000 தாண்டி விட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் நகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட காட்டேரி பகுதியில் ருக்மணி என்பவரின் வீட்டின் முன்புறம் மண் சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. தொடர்ந்து மழை பெய்துவருவதால், வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை எமரால்டு பகுதியை சேர்ந்த முன்னாள் MRC 12 Madras மில் பணியாற்றிய இராணுவ வீரர் மோகன் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் தகனம் உதகை வண்டிச்சோலை பகுதியில் நடைபெற்றது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நலசங்கம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி சேவா கேந்திரம், எச்ஆர்எம் மெம்மோரியல் டிரஸ்ட், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தவுள்ளது.இட்டக்கல்லில் உள்ள (HRM) மெம்மோரியல் மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று (நவ.17) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.சிகிச்சைக்கு வருபவர்கள் தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தலூர் நகராட்சி ஆணையாளர் நேரடி மேற்பார்வையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கட்சி நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியே ‘பளிச்’ என மாறியது. பந்தலூர் பஜார் பகுதியில் நாள்தோறும் தொடரும் சுகாதார சீர்கேடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்கள், வியாபார சங்கங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இதேபோல் தினமும் தூய்மை பணி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.