Thenilgiris

News October 30, 2024

நீலகிரி: லஞ்ச வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை

image

குந்தா தாலூகா அலுவலகத்தில் தந்தையின் இயற்கை மரணத்திற்கான உதவி தொகை காசோலை வாங்க சென்ற நாராயணன் என்பவரிடம் தாசில்தார் கனகம் மற்றும் உதவியாளர் சாஸ்திரி ஆகியோர் லஞ்சம் கேட்டது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த ஊட்டி நீதிபதி செந்தில்குமார் நேற்று கனகம், சாஸ்திரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News October 30, 2024

நீலகிரி: ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகம்

image

நீலகிரி கலெக்டர் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதன்படி ஊட்டி தொகுதியில் 93,942 ஆண்களும், 102,805 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 196,758 பேர் உள்ளனர். கூடலூரில் 93,722 ஆண்களும், 99,546 பெண்களும் மற்றும் 3ஆம் பாலினம் 4 பேர் என மொத்தம் 193,272 பேர் உள்ளனர். குன்னூரில் 89,338 ஆண்களும், 99,589 பெண்களும், 3ஆம் பாலினம் 4 பேர் என மொத்தம் 188,931 பேர் இடம் பெற்றுள்ளனர்.

News October 30, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

image

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும்போது இயற்கைச் சூழலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வெடிக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகளின் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவமனை, வாகனம் அருகில், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 29, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
2. ஜெஎஸ்எஸ் கல்லூரிக்கு ஏ++ தரச்சான்று வழங்கப்பட்டது.
3. வண்ணாரபேட்டையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
4.நீலகிரி: புத்தக திருவிழாவை 17,000 பேர் பார்வையிட்டனர்.
5.சோலூரில் செந்நாய்களின் கூட்டம்: மக்கள் அச்சம்
6.ஊட்டி படகு இல்ல ஏரியில் துர்நாற்றம்

News October 29, 2024

டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர், உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் டேன்டீ என்று தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இதில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி முன்னிட்டு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 29, 2024

கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

image

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தீபாவளி போனஸ் கிடைக்காத காரணத்தால் இன்று காலை முதல் பணிக்கு செல்லாமல், அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News October 29, 2024

நீலகிரி: புத்தக திருவிழாவை 17,000 பேர் பார்வை

image

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த, நீலகிரி புத்தக திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடந்தது. 10 நாட்கள் நடந்த கண்காட்சியில், ரூ.13 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. 17,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். 9 பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.52,000 காசோலை வழங்கப்பட்டது.

News October 29, 2024

ஊட்டி படகு இல்ல ஏரியில் துர்நாற்றம்

image

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் படகு சவாரி செய்கின்றனர். இந்த நிலையில் ஏரியை ஒட்டிய ஓட்டல்கள், விடுதிகள், பங்களாக்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலப்பதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தால் பல சுற்றுலா பயணியர் படகு சவாரியை தவிர்த்து செல்கின்றனர்.

News October 29, 2024

நீலகிரி: இரண்டாம் சோதனை ஓட்டமும் வெற்றி

image

நீலகிரி மலை ரயிலின் ‘பர்னஸ் ஆயில்’ இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டு நடந்த 2வது  சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. குன்னூர் பணிமனையில், சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தலைமையில், இரு பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் ஏற்கனவே டீசலுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 2வது சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நடந்தது. அப்போது ரேக்பார் கொண்ட தண்டவாளத்தில் எளிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் வந்தது.

News October 28, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிரியங்கா காந்தி வருகை புரிந்தார்.
2. குன்னூர் சாலையில் தீ விபத்து, சமூக ஆர்வலரால் அணைக்கப்பட்டது.
3.பந்தலூரில் பழங்குடியின மக்களின் பூ பூத்தரி எனும் அறுவடைத் திருவிழா நடைபெற்றது.
4. குன்னூர், உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பு.
5. கோத்தகிரி மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே கருவி அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!