India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குன்னூரை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இதனிடையே அவரது 16 வயது பேத்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இது குறித்து விசாரித்ததில், முதியவர் சிறுமியை கர்ப்பமாக்கியது தெரிந்தது. பின்னர் முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு மாணவர் விடுதிகள், வனப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட எஸ். பி. நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், வன அலுவலர் கவுதம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று, நெகிழி சேகரிப்பில் இன்று காலை 8 மணி முதல் ஈடுபட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் குன்னூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

▶️நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223839.▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் 0423-2223840. ▶️உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223811.▶️ உதகை கிராம துணை காவல் கண்காணிப்பாளர் 0423-2223829.▶️ குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04232-221834. ▶️கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் 04262-261227. ▶️தேவாலா துணை காவல் கண்காணிப்பாளர் 04262-260324. இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இந்த <

நீலகிரி: கூடலூர், தேவர்சாலை பாடந்துறையைச் சேர்ந்த ந்ஜமுதீன்(33). இவர் போதைப் பொருள் கடத்தி வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவரை போலீசார் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, நிஜாமுதீன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, நீதிபதி விசாரணையில் கூடலூர் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன் உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குன்னூர் நகராட்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் குன்னுார் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் நகராட்சி சார்பில் அவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதை மக்கள் மத்தியில் தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்

நீலகிரி மக்களே அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

கோடை சீசனை ஒட்டி மே 1-ம் தேதி முதல், நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. நிஷா தகவல் தெரிவித்துள்ளார். மே 1 முதல் பார்லியார் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்ற திட்டம். ஈஸ்டர் விடுமுறையின் போதே சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படும் என எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.