Thenilgiris

News November 1, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. நீலகிரியில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு
2.நீலகிரி மாவட்டத்தில் காற்று மாசு அதிகரிப்பு
3.உதகை: 80 முதியவர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கல்
4.ஊட்டி மோட்சராக்கினி ஆலயத்தில் ஜெபமாலை வழிபாடு
5.நீலகிரியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
6.நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

News November 1, 2024

நீலகிரி மாவட்டத்தில் காற்று மாசு அதிகரிப்பு 

image

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மாலை நேரத்தில் வெடித்த பட்டாசுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக உதகையில் காற்றின் மாசு வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த 3 நாட்களுக்கு காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோர், முககவசம் அணிந்து செல்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

News November 1, 2024

நீலகிரியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

image

தீபாவளி தொடர் விடுமுறையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் – ஊட்டி காலை 8:20 மணி, ஊட்டி – குன்னூர் மாலை 4:45 மணி என 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஊட்டி – கேத்தி ‘ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன்’ சிறப்பு ரயில் காலை 9:45 மணி, 11:35 மணி; மாலை 3:00 மணிகளில் சுற்று ரயில்களாக இயக்கப்படுகின்றன.

News October 31, 2024

தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்ற மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா ஆகியோர் இருந்தனர்.

News October 31, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. கண்காணிப்பு கேமாரா பதிவுகளை ஆய்வு செய்த எஸ்.பி
2. சாலையில் சுற்றித் திரிந்த காட்டெருமை
3.பசுந்தேயிலை விலை ரூ.24.59 ஆக தேயிலைவாரியம் அறிவிப்பு
4. சினிமா பொழுது போக்கு மட்டுமே, நிஜம் அல்ல: நீதிபதி கருத்து
5. உதகையில் விவசாயிகள் கூட்டம்
6. நீலகிரியில் காபி மகசூல் அதிகரிப்பு
7. குன்னூரில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு

News October 31, 2024

பசுந்தேயிலை விலை ரூ.24.59 ஆக தேயிலைவாரியம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்லீஃப் தேயிலை தொழிற்சாலைக்கு சிறு, குறு சாகுபடியாளர்கள் தினந்தோறும் பசுந்தேயிலைகளை பறித்து அளிக்கின்றனர். பசுந்தேயிலை அரைத்து தேயிலைதூளாக மாற்றி வாரந்தோறும் விற்பனை செய்யப்பட்டுள்ள தூளின் விலையை கணக்கிட்டு, அதன்படி மாதந்திர விலையை தேயிலைவாரியம் நிர்ணயம் செய்கிறது. அக்டோபர் மாதத்தின் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.24.59-ஆக அளித்திட தேயிலைவாரியம் உத்தரவிட்டுள்ளது. 

News October 31, 2024

உதகையில் விவசாயிகள் கூட்டம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நவம்பர் 15 தேதி 11 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை 4ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனநர், தபால் பெட்டி 72, உதகை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். கூட்டத்திலும் குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்தார்.

News October 31, 2024

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.10.2024) மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2024

தீபாவளி பாதுகாப்பு முன்னெச்சிரிக்கைகள்!

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது.
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது.
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌.
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌.
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌. SHARE IT!

News October 30, 2024

நீலகிரியில் தலைப்புச் செய்திகள்

image

1. குந்தா தாலூகா அலுவலகத்தில் லஞ்ச வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
2.குன்னூர்: திமுகவின் பவள விழா நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
3.நீலகிரி: ஆண்களை விட பெண் வாக்காளர் அதிகம்
4.குன்னூரில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
5.மஞ்சூரில் ரூ.80 லட்சத்தில் சாலை சீரமைப்பு தொடக்கம்

error: Content is protected !!