Thenilgiris

News November 19, 2024

நீலகிரி மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 23 தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

நீலகிரிகாரருக்கு அரசின் வெள்ளி பதக்கம்

image

தனது இரண்டு மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய நீலகிரியைச் சேர்ந்த போஜன் என்பவருக்கு தமிழ்நாடு அரசின் 12 கிராம் எடையிலான வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்தப் பதக்கமும் ராணுவ பணி ஊக்க மானியமாக ரூபாய் 25 ஆயிரம் பெறுவதற்கான அனுமதி ஆணையையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.

News November 19, 2024

நீலகிரியில் 6 குரங்குகள் பலி: மின்னல் தான் காரணமா?

image

கோத்தகிரி டான்பஸ்கோ சாலையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் 6 குரங்குகள் விழுந்து உயிரிழந்துள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர் அவைகளை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவை மின்னல் தாக்கி பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றார்.

News November 19, 2024

நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

உதகை, கேத்தி, சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 23ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கல்வி தகுதி 8வது வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் படிப்பு ஆகும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

News November 19, 2024

ஜனாதிபதி நீலகிரிக்கு வருகை: கலெக்டர், எஸ்பி ஆலோசனை

image

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்; நீலகிரியில் தங்குகிறார், இவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

News November 18, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
2.கோத்தகிரியில் மர்மமான முறையில் 6 குரங்குகள் இறப்பு
3.இட்டக்கல் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
4.உள்ளாட்சி முரசு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
5.நீலகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு

News November 18, 2024

உள்ளாட்சி முரசு விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

உள்ளாட்சி முரசு, உள்ளாட்சி மக்கள் அறக்கட்டளை மற்றும் துப்பறியும் விசாரணை குழுமத்தின் 15 வது ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளை கௌரவிக்கும் விழா நடைபெறவுள்ளது. “தாய்நாட்டின் தன்னலமற்ற தன்னார்வலர் விருது-2024” வரும் 22ஆம் தேதி உதகை பிங்கர் போஸ்ட் புனித சூசையப்பர் தொழிற்பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விருதுக்கான விண்ணப்பங்களை 21ஆம் தேதி வரை உள்ளாட்சி முரசு அலுவலகத்தில் அனுப்பலாம்.

News November 18, 2024

நீலகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25ம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறும். கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 30ஆம் தேதியும், மாரி கவுண்டர் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

நீலகிரியில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி

image

நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறினால் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத லிங்குகளை தொட கூடாது. குறிப்பாக செல்போனுக்கு வரக்கூடிய ஓடிபி எண்களை யாருக்கும் அனுப்பக்கூடாது. மேலும் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

News November 18, 2024

நீலகிரியில் கட்டணம் உயர்வு: குறைந்தது வருவாய்

image

காட்டேரி பூங்காவில் கடந்த காலங்களில் கேமராவுக்கு, 50 ரூபாய்; வீடியோ கேமராவுக்கு, 100 ரூபாய் என இருந்ததால், திருமண புகைப்பட, வீடியோ ஆல்பம் எடுக்க நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புகைப்படக்காரர்கள் அதிகம் வருகைதந்தனர். ஆனால், சமீபத்தில் திடீரென கேமராக்களுக்கு, ரூ.5000 கட்டணம் வாங்கி பல மடங்கு உயர்த்தியதால் தற்போது கூட்டம் வருவதில்லை. இதனால், தோட்டக்கலை துறைக்கு வருவாயும் குறைந்துள்ளது.

error: Content is protected !!