India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தந்தை பெரியாரை பற்றி சீமான் தவறாக பேசி வருகிறார் என்றும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாவட்டத் தலைவர் சுருளி ராஜ், மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் தி.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று(ஜன.9) தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட 02 ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிச. 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. 50% கூலி உயர்வு, 20% போனஸ் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர் 8 நாட்களாய் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிய முருகன் மதுரைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கரூரில் இருந்து சிவகுமார் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அலுவலர் சிவகுமாருக்கு விளையாட்டு அலுவலர் முருகன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அலுவலகத்தில் உள்ளோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வு, கலந்தாய்வு, கலெக்டர் அறிக்கைகள், கிரைம் செய்திகள், மக்களின் கோரிக்கைகளை நாம் தினந்தோறும் உடனுக்குடன் way2newsஇல் பதிவிட்டு வருகிறோம். இதையறிந்த தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் இன்று way2news செயலியை தனது சொந்த மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளார். இன்று முதல் எம்.பி.,யும் way2newsஇல் இணைந்து மக்களின் பிரச்னையை உடனுக்குடன் அறிந்து சரி செய்வார்.
மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 64 பள்ளிகளைச் சேர்ந்த 240 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் முதலிடத்தையும், 7 போட்டிகளில் 2-ம் இடத்தையும், 4 போட்டிகளில் 3-ம் இடத்தையும் பிடித்தது 48 பேர் வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளைத்தை சேர்ந்த 50 வயது பெண் அவருக்கு 55 வயதில் கணவரும் 16 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 2021ம் ஏப்ரலில் மகள் இரவில் தூங்கும் போது தந்தை பாலியல் தொந்தரவு செய்தார். இதனை தாயிடம் சிறுமி தெரிவித்தார். இது பற்றி சைல்டுலைன் எண்ணில் தாய் புகாரளித்தார். வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிறுமி தந்தைக்கு 5 ஆண்டு சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
தேனி ஜெயமங்கலம் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் படித்து வரும் ம.ரியா ஸ்ரீ என்ற மாணவி கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இதனை அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அந்த கிராமப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி கொண்டாடி வருகின்றனர்..
தேனி மாவட்டத்தில் இன்று 06.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஆண்டிபட்டி தொகுதியில் 2,77,620 வாக்காளர்களும், பெரியகுளம் தொகுதியில் 2,88,831 வாக்காளர்களும், போடிநாயக்கனூர் தொகுதியில் 2,75,153 வாக்காளர்களும், கம்பம் தொகுதியில் 2,82,709 வாக்காளர்களும், மொத்தம் 11,24,313 வாக்காளர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.