Theni

News January 13, 2025

தேனி மாவட்டத்தில் 15ஆம் தேதி மதுபான கடைகள் மூடல்

image

2025ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடி இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

தேனி மாவட்ட சத்துணவு அலுவலர் பணி ஏற்பு

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) அண்ணாத்துரை பணி ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். அலுவலர்களும், பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News January 13, 2025

தேனி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜன.12) மதியம் கூடலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா வைத்திருந்த தெய்வம், செல்வம், தினேஷ் ஆகிய மூன்று பேரை கைது வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

News January 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 12.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 12, 2025

காற்றின் தரத்தை பாதுகாக்க ஆட்சியர் வேண்டுகோள்

image

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 13.01.2025 அன்று போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.

News January 12, 2025

வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும்: டி.டி.வி தினகரன்

image

“பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தேனி முன்னாள் எம்பி டி.டி.வி.தினகரன் தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

SSI விவகாரம்: முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

image

திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த SSI கைது செய்யப்பட்ட நிலையில், குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவலர்களே குற்றவாளிகளாக மாறினால் பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகும்? காவலர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான உரிய சீர்திருத்தங்களை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என தேனி முன்னால் எம்பி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

News January 12, 2025

மின் தடை அவசர உதவிக்கு தொடர்பு எண் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஜன.19 வரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் நலன் கருதி மின்சாரத்துறை அதிகாரிகள் தங்களது பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையங்கள், மின் விநியோகப் பாதைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். சீரான மின் வினியோகம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பொது மக்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 94987 94987 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

வீடு விற்பதாக பண மோசடி செய்த பெண் கைது

image

தேனி அரண்மனைப்புதூர் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி. இவரிடம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் அவரது மனைவி கோகிலா ஆகியோர் தங்களது வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விஜயகுமாரை கடந்த மாதம் கைது செய்த நிலையில் கோகிலாவை நேற்று (ஜன.11) கைது செய்தனர்.

News January 12, 2025

இலவச டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி ஜன.27.ல் துவங்குகிறது. இதில் சேர விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!