India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் செப்.,15-ம் தேதி முதல் இலவச ஹோம் நர்சிங் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்.,15-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 ,2A, போட்டித் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பித்த தேனி மாவட்டத்தின் சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வருகின்ற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

ஆண்டிபட்டி உயர்மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரமின், ராஜகோபாலன்பட்டி, பொமின்மிநாயக்கன்பட்டி, ஏத்தகோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை என தேனி TNEB SE அறிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தங்களது பணிகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.

தேனி மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் செப்.13ம் தேதியன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உதயசந்திரன், சந்திரன், நாகராஜ், கருப்பையா, நாராயணசாமி, சுந்தரம், போலீசார் செந்தில்குமார், தீபா, ரேவதி மற்றும் மாவட்டத்தில் பிற போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசார் எழில் வளவன், ஸ்டாலின், பாண்டியராஜ், சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி ஆகிய 13 பேரை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின் பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும். பரிசு ரூ.2 லட்சம், பதக்கம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் செப்.15க்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் குடும்ப செலவிற்காக அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்த தயாளன் நேற்று (செப்.10) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.