Theni

News January 18, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 18, 2025

தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்

image

முதல்வரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில் (CM ARISE) மொத்த மதிப்புத் தொகையில் 35 சதவீதம், அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்., விவரங்களுக்கு 04546 – 260995 அழைக்கலாம்.

News January 18, 2025

ரூ.74.75 லட்சம் மோசடி இருவர் கைது

image

ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தா் என்பவரிடம் ரேவதி, இவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேர் சேர்ந்து 125 பவுன் தங்க நகைகள் செய்து தருவதாகக் கூறி ரூ.74.75 லட்சம் பெற்றுக்கொண்டு நகைகள் செய்து தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று (ஜன.17) ரேவதி, வீரன் ஆகிய இருவரையும் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

News January 17, 2025

மாநாடு செல்லும் பேருந்தினை துவக்கி வைத்த எம்பி

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை 3வது மாநில மாநாடு (ஜன.18) நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்காக தேனி மாவட்ட சட்டத்துறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செல்லும் பேருந்தினை இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

போடியில் அமமுகவில் இணைந்த இளைஞர்கள்

image

போடியில் அமமுகவின் போடி நகர் செயலாளர் SVS ஞானவேல் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக தங்களை அமமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், போடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பேச்சாளர் Aபோத்திராஜ் மற்றும் நகர நிர்வாகிகள், சார்பணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

தேனி அருகே விபத்து; மரணம் 

image

தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் நேற்று (ஜன.16) ரஞ்சித்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு தேனி பெரியகுளம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் வந்த எல்.எஸ் மில் பஸ் பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி போலீசார் பஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.

News January 17, 2025

போடியில் பட்டாசு வெடிக்க தடை; மீறினால் ரூ.5000 அபராதம்

image

போடி நகராட்சி பகுதிகளில் பட்டாசு வெடிக்க நகராட்சி முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நிபந்தனைகள் மீறும் நபர்களுக்கு ரூ.5000 நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். நிகழ்ச்சிகள் நடைபெறுவது மண்டபமாக இருந்தால் மண்டப உரிமையாளரிடமும் வீட்டில் நடைபெறுவதாக இருந்தால் விசேஷம் நடத்துபவரிடம் சேவை கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 16, 2025

தேனி காளைக்கு சிறந்த காளைக்கான பரிசு

image

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
2ம் பரிசான பைக் தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூரை சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3ம் பரிசாக தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளைக்கு சிறந்த காளைக்கான எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது.

News January 16, 2025

தேனி அருகே கொலை: 6 பேர் கைது

image

தேனி அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த மோகன்பால் (21) தனது நண்பர் பிரகாஷுடன் ஜன.11 அன்று நடந்து சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்,அஜீத் இவரது நண்பர்கள் கெளதம்,பிரவீன்,ரஞ்சித்,லட்சுமணன் ஆகியோா் சோ்ந்து மோகன்பாலுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.

News January 16, 2025

வனப்பகுதிக்குள் அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

image

கம்பத்திலிருந்து நெடுங்கண்டம் சொல்லக்கூடிய வனப்பகுதிக்குள் நேற்று (ஜன.15) கம்பம் வனச்சரக வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது வனப்பகுதிக்குள் எறும்பு மொய்த்த நிலையில் ஆணா பெண்ணா என அடையாளம் தெரியாத வகையில் எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!