India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் முருகன் (46) என்பவரை மாடு மார்பில் குத்தியதில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது அடிப்படை வசதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மனுக்களை அளித்து பயன் பெறுமாறு இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுந்தர விக்னேஷ் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் பலரிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த கனக துர்கா, சூர்யா, சரண்யா ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏற்கனவே கனக துர்காவை கைது செய்த நிலையில் நேற்று (ஜன.20) சரண்யாவை கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 20.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.03.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என இன்று (ஜன.20) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (ஜன 20) ஆண்டிப்பட்டி 9.2 மி.மீ, அரண்மனைப்புதூர் 10 மி.மீ, வீரபாண்டி 8.4 மி.மீ, பெரியகுளம் 20 மி.மீ, மஞ்சளாறு 7.4 மி.மீ, சோத்துப்பாறை 24 மி.மீ, வைகை அணை 5.8 மி.மீ, போடிநாயக்கனூர் 9.6 மி.மீ, உத்தமபாளையம் 6.8 மி.மீ, கூடலூர் 6.6 மி.மீ, பெரியாறு அணை 13.2 மி.மீ, தேக்கடி 17.8 மி.மீ, சண்முகா நதி 15.6 மி.மீ. சராசரி மழை அளவு =11.87 மி.மீ
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (41). இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிடாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.19) வெளியே சென்றவர் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஒரு பாதுகாப்பு அலுவலர் மற்றும் 2 சமூக பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்
தேனி மாவட்டத்தில் இன்று 19.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனியிலிருந்து சென்னை செல்ல அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் இன்று (ஜன.19) கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிக்க இருக்கை வசதி, சாயும் இருக்கை வசதி, படுக்கை வசதி, ஏ.சி., வசதி கொண்ட அரசு பஸ்களில் பயணிக்க www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.442 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.