Theni

News February 18, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 18, 2025

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நாளை வருகை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு(2024-2025) தேனி மாவட்டத்தில் நாளை (19.02.2025) குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்களுடன் வருகின்றனர். வேளாண், கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, சிறைச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

தேனியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7695973923 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

News February 18, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (பிப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 63.27 (71) அடி, வரத்து 160 க.அடி, திறப்பு 69 க.அடி, பெரியாறு அணை 17.25 (142) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 400 க.அடி, மஞ்சளார் அணை 39.85 (57) அடி, வரத்து 20 க.அடி, திறப்பு 75 க.அடி, சோத்துப்பாறை அணை 88.23 (126.28) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 25 க.அடி, சண்முகா நதி அணை 29 (52.55) அடி, வரத்து இல்லை, திறப்பு 14.47 க.அடி.

News February 17, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 17.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 17, 2025

தேசிய அளவிலான கணிதத் திறன் போட்டியில் 2ம் இடம்

image

பெரியகுளம் வட்டம் வடுகபட்டியில் ஸ்ரீ மார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன் நா.சித்தார்த் சென்னையில் நடைபெற்ற ப்ரைன்பாய் நடத்தும் 3வது தேசிய அளவிலான கணிதத் திறன் வளர்ப்புப் போட்டியில், 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இம்மாணவனுக்கு இன்று பள்ளி வளாகத்தில்,மாணவர்கள் முன்னிலையில் பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

மஞ்சள் பை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் மஞ்சள் பை விருது பெறுவதற்கு தகுதியுள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி அல்லது மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி என்ற முகவரியில் மே 1ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

News February 17, 2025

காவல் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த கார்

image

பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் முல்லைப்பெரியாறு செல்லும் ரோடு, சுற்றியுள்ள இடங்களில் பறிமுதல் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் ஒன்று நேற்று முன்தினம் (பிப்.15) திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

News February 16, 2025

வேளாண் கருவிகளுக்கு,உழவன் செயலி பயன்படுத்த அறிவிப்பு 

image

தேனி மாவட்டத்தில் நெல் அறுவடை மற்றும் வைக்கோல் கூட்டும்,கட்டும் கருவிகள் தேவைக்கு விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்துகொள்ளுமாறு தேனி மாவட்ட வேளாண்.பொறியியல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு,பெரியகுளம்,தேனி,போடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!