India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விபரம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த<

தேனி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

போடியை சேர்ந்தவர் ராகுல்குமார் (21). கல்லூரி மாணவரான இவர் நேற்று முன் தினம் பைக்கில் தனது உறவினரை பார்ப்பதற்காக கம்பம் சென்றுள்ளார். கம்பம் பைபாஸ் சாலையில் சென்ற பொழுது சாலையில் இருந்த பேரிகார்டு மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகுல்குமார் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நேற்று (செப்.14) அவரது பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் யோஸ்வா என்பவர் ஓட்டி வந்த கார் கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ராஜபிரியா தனியார் பள்ளி ஆசிரியை. கணவன் மனைவி இடையே நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜபிரியா கோவித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.14) மீண்டும் வீடு திரும்பிய அவரை சதீஷின் தந்தை துரைசிங்கம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் விசாரணை.

தேனி வேலை வாய்ப்பு மையத்தில் செப்.20 அன்று TNPSC குரூப் 2, 2 ஏ தேர்விற்கான இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு விண்ணப்ப நகல், புகைப்படம் சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 63792-68661 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHARE செய்ங்க.

ஆண்டிபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பாண்டியன் (40) நேற்று முன்தினம் (செப் 12) சிலரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முத்தனம்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். முத்தனம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் பாண்டியன் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் வழக்கு (செப்.13) பதிவு செய்துள்ளனர்.

போடி நகர் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது போடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கோட்டைச்சாமி என்பவரும், அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.