Theni

News February 7, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 7, 2025

காலாவதியான 20195 கிலோ பொருட்கள் பறிமுதல் 

image

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜ் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்களை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி குறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஹோட்டல் டீக்கடை பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் சுமார் 20195 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து 15 ஆயிரம் ரூபாய் உணவு பாதுகாப்பு துறை மூலம் அபராதம்  விதித்தனர்.

News February 7, 2025

வள்ளலார் தினத்தை முன்னிட்டு, மதுபான கடை மூடல்

image

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் எதிர்வரும் 11-ம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு,அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது.மேற்காணும் நாளில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

மக்கள் தொடர்பு திட்ட முகாம்,கலெக்டர் அறிவிப்பு

image

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி உள்வட்டம், கோவிந்தநகரம் வருவாய் கிராமம், குப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏதிர்வரும் 12.02.2025-ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.எனவே, தேனி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுத்து பயன்படலாம் என ஆட்சித் தலைவர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

தேனி ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழக அரசு வீடு தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்தி வரும் தீவிர வாசகர்கள், சொந்த நூலகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி இருபதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தகவல்

News February 7, 2025

தென்னைமரத் தொழிலாளிக்கு இன்சூரன்ஸ்

image

தென்னை மரம் ஏறுவோர்,தண்ணீர் பாய்ச்சுவோர்,கலப்பினம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.239 க்கு புதிதாக இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா  தெரிவித்துள்ளார். இதில் 18 முதல் 65 வயதுடைய தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். காப்பீட்டு தொகை ரூ.7 லட்சமாகும். இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை செலவுகள், மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி ஆகியவை கிடைக்கும்.

News February 7, 2025

ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம்

image

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும். தாலுகா அளவில் மழை, வெப்பநிலை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.20,000 வழங்கப்படும். விரும்பும் விவசாயிகள் போடி தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரவித்துள்ளார்.

News February 7, 2025

தேனி GH-ல் 5 மாதமாக தாய்-சேய் இறப்பு இல்லை!

image

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான, பிரசவித்த தாய்மார்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மூலம் கடந்த 5 மாதங்களில் சிசுக்கள் இறப்பு இன்றி மகப்பேறு மருத்துவத்துறை சாதனை படைத்துள்ளது. 2024 செப்டம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையிலான 5 மாதங்களில் 1324 ஆண் குழந்தைகளும், 1302 பெண் குழந்தைகள் என 2626 குழந்தைகள் ஆரோக்கியதுடன் பிறந்துள்ளதாகவும் மருத்துவர் நந்தினி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்!

image

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று(பிப்.6) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட நீர் 5 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் என நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News February 7, 2025

தேனி: கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – கலெக்டர்

image

தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று(07.02.2025) காலை 09.30 மணியளவில் கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து, கொத்தடிமை முறை விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட உள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!