India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். நேற்று அவர் மனுதாக்கல் செய்த நிலையில் தனது அசையா சொத்து மதிப்பு ரூ.9.17 கோடி என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்தாக 216 கிராம் தங்கநகை, 5 வாகனங்கள் உட்பட ரூ.2.94 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.5.40 கோடி கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போடி தாலுகாவிற்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் போடி சிலமலை பகுதியை சேர்ந்த கருப்பசாமி (37) என்பதும், அவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பெரியகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62) என்பவர் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62) என்பவர் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <

தேனி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற இங்கு <

தேனி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது.மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<

கம்பத்தை சேர்ந்த கார் மெக்கானிக்கான சுர்ஜித் (24), தீபக் (23) ஆகியோர் வாடிக்கையாளரின் காரை பழுது நீக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அனுமந்தன்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது சந்தீப் (46) என்பவர் ஒட்டி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுர்ஜித், தீபக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

கம்பத்தை சேர்ந்த கார் மெக்கானிக்கான சுர்ஜித் (24), தீபக் (23) ஆகியோர் வாடிக்கையாளரின் காரை பழுது நீக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அனுமந்தன்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது சந்தீப் (46) என்பவர் ஒட்டி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுர்ஜித், தீபக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.
Sorry, no posts matched your criteria.