Theni

News February 11, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 10.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 10, 2025

தேனி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

போடி பகுதியை சேர்ந்தவர் சேதுராம் (61). இவர் தனது குழுவினருடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். நேற்று (பிப்.9) தோட்டக்கலை கல்லூரி அருகே நடந்து சென்ற போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பேருந்து சேதுராம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் பேருந்து ஓட்டுனர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு.

News February 10, 2025

தேனி மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள 162 துணை சுகாதார நிலையங்கள், 1065 அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க முகாம் இன்று (பிப்.10ல்) துவங்குகிறது. இந்த ‘அல்பெண்டசோல்’ மாத்திரைகள் ஒரு வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் 19 மொத்தம் 3.73 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

News February 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 9, 2025

தேனி மாவட்ட புதிய ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம்

image

தமிழக அரசு 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இன்று பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்து வந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News February 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 08.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 8, 2025

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர் & அமைப்புகளை சார்ந்த 100நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது & தலா ரூ.1 லட்சம் வீதம் காசோலை வழங்க உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தகுதியான நபர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணையதளம் www.tnpcb.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்*ஷேர்

News February 8, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.08) நீர்மட்டம்: வைகை அணை: 64.80 (71) அடி, வரத்து: 334 க.அடி, திறப்பு: 369 க.அடி, பெரியாறு அணை: 119.40 (142) அடி, வரத்து: 148 க.அடி, திறப்பு: 556 க.அடி, மஞ்சளார் அணை: 43.35 (57) அடி, வரத்து: 16 க.அடி, திறப்பு: 75 க.அடி,
சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 4.5 க.அடி, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 34.70 (52.55) அடி, வரத்து: 2 க.அடி, திறப்பு: 14.47 க.அடி

News February 8, 2025

தேனி அருகே சிறையில் இருந்து பிணையில் வந்தவர் வெட்டி கொலை

image

தேனி அப்பிப்பட்டியை சோ்ந்தவா் வேல்மணி. இவர் ராணி என்ற பெண்ணை தாக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவில் நடந்து சென்ற வேல்மணியிடம், எனது அத்தை ராணியை நீ எப்படி தாக்கலாம் எனக் கூறி அவரை அரிவாளால் சிவச்சந்திரன் என்பவர் வெட்டி உள்ளார். இதில் வேல்மணி உயிரிழந்தார். ஓடைபட்டி போலீசார் சிவச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2025

தேனி மாவட்டத்தில் இன்று நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

தேனி உப்பார்பட்டி ரேஷன் கடை, பெரியகுளம் இ.புதுக்கோட்டை கிராமம் முருகமலைநகர் ரேஷன்கடை, ஆண்டிபட்டி போடிதாசன்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் லோயர்கேம்ப் பளியன்குடி ரேஷன்கடை, போடி போ.நாகலாபுரம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டங்கள் இன்று (பிப்.8) நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!