India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (பிப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 63.27 (71) அடி, வரத்து 160 க.அடி, திறப்பு 69 க.அடி, பெரியாறு அணை 17.25 (142) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 400 க.அடி, மஞ்சளார் அணை 39.85 (57) அடி, வரத்து 20 க.அடி, திறப்பு 75 க.அடி, சோத்துப்பாறை அணை 88.23 (126.28) அடி, வரத்து 2 க.அடி, திறப்பு 25 க.அடி, சண்முகா நதி அணை 29 (52.55) அடி, வரத்து இல்லை, திறப்பு 14.47 க.அடி.
தேனி மாவட்டத்தில் இன்று 17.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பெரியகுளம் வட்டம் வடுகபட்டியில் ஸ்ரீ மார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவன் நா.சித்தார்த் சென்னையில் நடைபெற்ற ப்ரைன்பாய் நடத்தும் 3வது தேசிய அளவிலான கணிதத் திறன் வளர்ப்புப் போட்டியில், 2ம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.இம்மாணவனுக்கு இன்று பள்ளி வளாகத்தில்,மாணவர்கள் முன்னிலையில் பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் மஞ்சள் பை விருது பெறுவதற்கு தகுதியுள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தேனி அல்லது மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி என்ற முகவரியில் மே 1ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் முல்லைப்பெரியாறு செல்லும் ரோடு, சுற்றியுள்ள இடங்களில் பறிமுதல் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் ஒன்று நேற்று முன்தினம் (பிப்.15) திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் நெல் அறுவடை மற்றும் வைக்கோல் கூட்டும்,கட்டும் கருவிகள் தேவைக்கு விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்துகொள்ளுமாறு தேனி மாவட்ட வேளாண்.பொறியியல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு,பெரியகுளம்,தேனி,போடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அனைத்து வேலை நாட்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படும் என தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அதில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு உள்ளிட்டவைகளை பெரியகுளம், போடி உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களிலும் தேனி துணை அஞ்சலகங்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
கா்நாடக மாநிலத்தை சோ்ந்த கோபால நாயக் உள்ளிட்ட 5 பேர் மாலை அணிந்து ஆம்னி வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று (பிப்.15) மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். உத்தமபாளையம் அருகே வந்த போது வேனில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து வேனை நிறுத்திய ஓட்டுநர் அனைவரையும் கீழே இறங்கிவிட்டார். வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலருக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். வெயிலில் அலையக்கூடாது. தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எந்த வகையான அம்மை என்பதை கண்டறிந்து டாக்டர்களின் ஆலோசனைப்படி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.