India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி அருகே கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். அவரிடம் சமூக வலைதளம் மூலம் பெரம்பலுாரை சேர்ந்த அஸ்வின் அறிமுகமானார். நட்பாக பழகிய நிலையில், புகைப்படங்களை அனுப்புமாறு அஸ்வின் கூற மாணவி அனுப்பினார். இந்நிலையில் மாணவியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு வாலிபர் அனுப்பினார்.மாணவியின் தந்தை புகார் அளித்தார். போலீசார் அஸ்வினை கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர் சில
முக்கிய முடிவுகளை எடுக்க தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவார்.
பெண்கள் நகரங்களில் தங்கி பணி புரிவதற்காக அரசு சார்பில் அமைக்கப்படும் விடுதிகள் தான் தோழி மகளிர் விடுதி. தனியார் விடுதிகளை விட மிகக் குறைந்த கட்டணம் , சிசிடிவி கேமரா , வை-பை , குடிநீர் , கழிப்பறை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு ஆகிய வசதிகளுடன் இந்த அரசு விடுதி செயல்படும். இன்றைய பட்ஜெட்டில் தேனி உட்பட 10 மாவட்டங்களில் புதிய தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி கனராவங்கி ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மார்ச் 26 முதல் மே 5 வரை நடக்கிறது. உணவு, தங்குமிடம் இலவசம். விரும்புவோர் ஆதார் நகல், புகைப்படத்துடன் தேனி கருவேல் நாயக்கன்பட்டி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கு share செய்து உதவவும்.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் 200 செம்மறி ஆடுகளை 18ம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் தனியார் விளைநிலத்தில் கிடை அமர்த்தியுள்ளார். 4 நாட்களுக்குமுன் அதிகாலை ஆடுகள் இங்கும் அங்கும் ஓடுவதைஜெயக்குமார் பார்த்தபோது ஆட்டுக்கிடைக்குள் இருந்து சிறுத்தை ஒன்று ஓடியது.உள்ளே சென்று பார்த்தபோது 5 ஆடுகள் இறந்து கிடந்தன.
இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் குச்சனூரில் தான் உள்ளது . இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடுகிறது. இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் , குடும்பத்தில் உள்ள சிக்கல் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை . மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.
குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .
குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 13) நீர்மட்டம்: வைகை அணை: 59.68 (71) அடி, வரத்து: 314 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 114.05 (142) அடி, வரத்து: 257 க.அடி, திறப்பு: 367 க.அடி, மஞ்சளார் அணை: 32.05 (57) அடி, வரத்து: 45 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 06 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 31.30 (52.55) அடி, வரத்து: 13 க.அடி, திறப்பு: இல்லை.
போடியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தான் மற்றும் தனது உறவினர்கள் சிலரிடம் போடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி சுதா ஆகியோர் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி மொத்தம் ரூ.32.4 லட்சம் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி சிவ பிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது நேற்று (மார்.12) வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.