India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு டிஜிட்டல் அரஸ்ட் குறித்து வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம்; இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய சைபர் க்ரைம் குற்றங்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இது போன்ற விழிப்புணர்வு செய்திகளை *ஷேர் செய்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்கள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த 9498383075 மற்றும் 9498383076 என்ற எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்கள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க உதவி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த 9498383075 மற்றும் 9498383076 என்ற எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளின் நில விபரங்கள், ஆதார்,பயிர் சாகுபடி, அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இந்த அடையாள எண் பெற்றால் மத்திய, மாநில அரசு திட்டங்களை எளிதில் பெறலாம். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் மார்ச் 31க்குள் பொது சேவை மையங்களில் கட்டணமின்றி பதிவு செய்யலாம்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி இணைப்பு கோரும் பொது மக்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக இணைப்பு வழங்க உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான சேனல்கள் குறைந்த மாத சந்தா தொகையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி வனச்சரகம் மூலம் காப்புக்காடுகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் விதமாக 2 வகையான தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கரைப்பட்டி, அருங்குளம் மேற்கு, கிழக்குப்பகுதி, முத்துக்கோம்பை பகுதியில் 3 மீட்டர் அகலத்தில், 33 கீ.மீ தொலைவிலும், அகமலையின் மேற்குப் பகுதியில் உள்ள வரட்டாறு, போடி உலகுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 மீட்டர் அகலத்தில், 38 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் கோவில். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இந்த கோவிலில் சிவலிங்கத்தை வணங்கியபடி நிற்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும் , பேச்சில் குறைபாடு உள்ளவர்களும் இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச்.03) நீர்மட்டம்: வைகை அணை: 61.12 (71) அடி, வரத்து: 234 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 115.20 (142) அடி, வரத்து: 97 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 35.20 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 73.14 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 27.50 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. தேனி மாவட்டத்திற்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.