India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் அரசின் சிமெண்ட் மூட்டை ரூ.216 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் பழுது நீக்கும் பணி என்றால் வீ.ஏ.ஓ., சான்றிதழ் பெற்று வந்தால் 25 மூடைகள், புதிய கட்டங்களுக்கு என்றால் கட்டட அனுமதி சான்றுடன் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 700 மூடை வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களை அணுகலாம் என தேனி நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரால் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சவுக்கு சங்கர் மே-4 அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனாவுக்கு தேனி எஸ்.பி சிவப்பிரசாத் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடக்க தேனி ஆட்சியர் நேற்று (ஆக.12) உத்தரவிட்டார்.

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகு கலை மேலாண்மை பயிற்சி ஆக.19 இல் துவங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் தேனி உழவர் சந்தை எதிரே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் புகைப்படம், ஆதார் நகல் உடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி அரசு கலை கல்லூரியில் நாளை (ஆக.14) சிறப்பு சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 முடித்து இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களை பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 5 புகைப்படம் எடுத்து வர அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்பிடுகையில் பெய்ய வேண்டிய மழை 14 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அந்த வகையில் தேனியில் பெய்ய வேண்டிய மழையானது 10% ஆக இருக்கும் நிலையில், இதுவரை 25% பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!

தேனியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மஞ்சளார் அணையின் நீர்வரத்து 50 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளார் அணையில் இருந்து 50 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மஞ்சளார் அணையின் நீர் இருப்பு 435.32 கன அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்கள்: ஆண்டிப்பட்டி 50 மி.மீ., அரண்மனைப்புதுார் 16.6, வீரபாண்டி 26.2, பெரியகுளம் 46, மஞ்சளாறு 35, சோத்துப்பாறை 86, வைகை அணை 49, போடி 7.6, உத்தமபாளையம் 7.4, கூடலுார் 8.2, பெரியார் அணை 11, தேக்கடி 4.2, சண்முகா நதி அணை 8.8 மி.மீ., தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 27.3 மி.மீ., மழை பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(ஆக.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆக.15 அன்று சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.