Theni

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

image

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.

News August 14, 2024

முருங்கை பிசின் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

image

தேனி விவசாயிகள் முருங்கை காய்களில் ஏற்படும் பிசின் நோயை தடுக்க முருங்கை சாகுபடி செய்த பகுதியில் 1 ஏக்கருக்கு 7 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். சிட்ரோனெல்லா எண்ணெய், யூகலிப்படஸ் எண்ணெய், வினிகர் பயன்படுத்தலாம். காய்கள் 50% காய்த்த நிலையில் நிம்பிசைடின் 1 லிட்டருக்கு 3மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம். 35 நாட்கள் இடைவெளிக்குப்பின் 2வது முறை தெளிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News August 14, 2024

தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News August 14, 2024

சிறுதானிய சாகுபடிக்கு 40% உழவு மானியம்

image

தேனியில் சிறுதானிய சாகுபடி அதிகரிப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 40% மானியம் அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.5400 வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சிறுதானிய சாகுபடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் பெறுவது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை அணுகி விபரம் பெறலாம் என வேளாண் துறையினர் அறிவித்துள்ளது.

News August 14, 2024

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு பஸ்கள்

image

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை காலை நடைபெற உள்ளது. இதில் போலீசார் அணிவகுப்பு, பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசார், அரசுத்துறை அலுவலர்கள் 140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News August 14, 2024

ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.16ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனர். மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 04546-254510, 94990 55936 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 14, 2024

கோவில்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டியில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!