India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. இந்த வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.

சமூக வலைதளங்களில் வைத்திருக்கும் மற்றும் பகிரும் புகைப்படங்களை வைத்து முக மோசடிகள் அதிகரித்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் டிச.30-ம் தேதி சங்கா், இவரது மனைவி கணேஷ்வரி ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடி வந்த நிலையில் புதன்கிழமை அவரது மனைவி மீட்கப்பட்டார். தொடர்ந்து சங்கரின் உடலை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று சங்கரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் டிச.30-ம் தேதி சங்கா், இவரது மனைவி கணேஷ்வரி ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடி வந்த நிலையில் புதன்கிழமை அவரது மனைவி மீட்கப்பட்டார். தொடர்ந்து சங்கரின் உடலை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று சங்கரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தேனி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

நாராயணதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவா (29). இவருக்கு சற்று வாய் பேச முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சல் அடைந்த சிவா நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் (ஜன.1) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

கேரளா, போடி. குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணை தடுப்பணையை கடந்து வெள்ளப் பெருக்காக நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.