India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஆக.1 தேதி 56.20 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 65 அடியாக உயர்ந்துள்ளது. 66 அடியில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். இதற்காக நீர்வரத்து 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு தேனி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 04546-251030, 9159668240 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம், போடி, பகுதியில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அச்சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழி முறைகள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்க விதி முறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் ஷஜீவணா தெரிவித்துள்ளார்.

மதுரை – போடிநாயக்கனூர் ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைக்கான இறுதிகட்ட சோதனை ஓட்டம் இன்று நடந்தது. 140 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த ரயில் வழித்தடத்தில் இதுவரை டீசல் என்ஜின்களே இயக்கப்பட்டு வந்தன. இனி எந்த ஊரில் இருந்து மதுரை வரும் ரயிலும் அப்படியே தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு இயக்க முடியும். புதிய ரயில்கள் போடி வழித்தடத்தில் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துகிறது. 2022-20-23 ஆம் ஆண்டு போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ரித்திகா, சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற ரித்திகா உட்பட 20 மாணவர்கள் கல்வித்துறை சார்பில் ஹாங்காங்கிற்கு 5 நாள் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகர் பகுதியில் இன்று (பி.ஆர்.பி குரூப்) ஆலியா ரெஸ்டாரன்ட் உணவகத்தினை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளக்கேற்றி வைத்து, திறந்து வைத்தார். உடன் உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி.ஆர்.பி அழகுராஜா, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று தேனி பழைய பேருந்து நிலையம் வழியாக ஒரு வழிப்பாதையாக போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்கள் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி ரா.சிவபிரசாத், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.22) காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64.70 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணி அக்டோபர் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர் நீக்கம், இடம் பெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்ய பொதுமக்கள் ஆன்லைனில் www.nvsp.in என்ற இணைய முகவரி அல்லது voter helpline செயலியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.அதேபோல் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 1 அல்லது தொழிற் பயிற்சிகளில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.