India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் கேரளாவில் உள்ள தனது குழந்தைகளை பார்த்துஆக.24.ல் ஊர் திரும்புவதற்காக தனியார் ஜீப்பில் போடிக்கு வந்துள்ளார். இரவு நேரமானதால் அன்றிரவு ஜீப்பிலேயே தங்க சொல்லிவிட்டு ஜீப் ஓட்டுநர் அவரது வீட்டிற்கு சென்றார். ஓட்டுநர் நேற்று (ஆக.25) மீண்டும் வந்தபோது ஜீப்பில் தூங்கிய நிலையில் அழகர்சாமி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

தேனி டி,சிந்திலைச்சேரி பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இவரிடம் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டவர் உங்களுக்கு ரூ.12.80 லட்சம் மதிப்பில் பரிசு விழுந்துள்ளது என்றுள்ளார். அதை நம்பி ரூ.17.69 லட்சம் வரை 11 வங்கி கணக்களுக்கு அனுப்பினார். ஆனால் கார் தராமல் ஏமாற்றியதால் சந்தேகமடைந்தவர் தேனி சைபர் கிரைம்ல் புகாரளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போலி கால்சென்டர் உரிமையாளர் ரோகித் குமாரை போலீசார் கைது செய்தனர்.

தேனி ஜங்கால்பட்டியை சேர்ந்த அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்கள் தனது மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவர் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று (ஆக.24) பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை மீண்டும் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் பெற்றோரை கைது செய்தனர்.

தேனி காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன், 52. கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தும் தனசேகரன் ரூ. 100 கோடி கடனுக்கு முன்பணமாக, 1 கோடி செலுத்தனும் என்றார். கண்ணன் தவணையாக, ரூ.89 லட்சம் வழங்கினார். கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றினார். பணத்தை திரும்பி கேட்ட போது, ரூ.34 லட்சம் கொடுத்த மீதித்தொகை,ரூ. 55 லட்சம் தராமல் கொலை மிரட்டல் விடுத்தார்.தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனசேகரனை கைது செய்தனர்.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேல் தலைமையிலான போலீசார் நேற்று (ஆக.23) கம்பம் கோம்பை ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற இளையேந்திரன், சுரேஷ், வனராஜ் ஆகிய 3 பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்த கம்பம் வடக்கு போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி என்பவரிடம் டிஜிட்டல் கைது என கூறி நூதன முறையில் டெல்லியை சேர்ந்த அபிஜித்சிங் என்பவர் ரூ.84,50,000 மோசடி செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட அபிஜித்சிங்கை கைது செய்து தேனி அழைத்து வந்தனர். தொடர் நடவடிக்கையாக அவர் மீது நேற்று (ஆக.23) குண்டர் தடுப்பு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரண்மனைபுதூர் பகுதியில் சதீஷ்குமார்,அஜித்தா தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது நேற்று இவர்களது வீட்டில் சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மனைவி, மகள் கழுத்தறுக்கப்பட்டு இறந்துகிடந்தனர். இந்நிலையில் நிதிநிறுவனத்தில் ஏற்பட்ட கடன்தொல்லையால் சதீஷ்குமார் ஆறு மாத கர்ப்பிணி மனைவி, மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ததார் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பொருளாதாரம் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெறுவதற்கு லோன் மேளாக்கள் நடைபெற உள்ளது. இதில் தனிநபர் மற்றும் குழுகடன் பெற விருப்பமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினர் உரிய ஆவணங்களுடன் ஆக.29 அன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனியில் வரி செலுத்துவோர் அனைவரும் தினசரி கணக்கு புத்தகம் பராமரிப்பு, செலவின விபரங்களை பதிவு செய்வது, முதலீட்டு விபரங்களை கணக்கில் இணைப்பது, கையிருப்பாக தங்கம், ரொக்கம் வைத்திருந்தால் அந்த விபரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட 4 மிக முக்கிய அம்சங்களை தொடர்ந்து பராமரித்து நிர்ணயித்த தேதிக்கு முன் வரித்தாக்கல் செய்து பண இழப்பை தவிர்க்குமாறு தேனி மாவட்ட வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் ஆதிதிராவிட நலத்துறை கீழ் இயங்கி வரும் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.18,000 அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.