India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 9:00 மணி நிலவரப்படி சோழவந்தான் 11.23%, உசிலம்பட்டி 5%, ஆண்டிபட்டி 8%, பெரியகுளம் 9.8%, போடிநாயக்கனூர் 16%, கம்பம் 2.19% என மொத்தமாக 8.59% வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 142 அடி வரை நீர்த்தேக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் அணையின் தற்போதைய நீர்மட்டம் 115. 25 ஆக உள்ளது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போதைய நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. ஐந்து மாவட்டங்கள் இதன் மூலமாகத்தான் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.
தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான சோதனை சாவடிகள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மார்ச் 18 முதல் இன்று வரை ரூ.1,59,60,515 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததின் பேரில் ரூ.1,52,08,330 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 7,52,185 கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நாளை (ஏப்.19) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிமலையில் ஆறு வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள துரைச்சாமி மரகதம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி செயல்படுகிறது. அந்த ஆறு வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேரும், அவர்களுடன் போலீசாரும் பணியாற்ற உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு – மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கம்பம், போடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பூத் எண்.40 ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத் எண்.10 வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, போடியில் எண்.116 அரசு மேல்நிலைப்பள்ளி மேலசொக்கநாதபுரம், எண்.208 பி.சி.பட்டி பழனியப்பா பள்ளி, கம்பம் தொகுதியில் 176 உத்தமபாளையம் அல்ஹிமா பள்ளியில் பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இவற்றில் பெண் அதிகாரிகளே முழுவதும் பணிபுரிவார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,225 வாக்குச்சாவடிகளில் , 1469 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்கள், நிலை 1 முதல் 4 வரை என மொத்தம் 6,074 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான பணி கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான பணி ஆணை இன்று சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் மே 7 ஆம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (ஏப்.17) வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீட்டில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு (www.rte.tnschools.gov.in) என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.