Theni

News August 29, 2024

டூவிலர்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண் உயிரிழப்பு

image

உசிலம்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியை சோ்ந்தவர் ஈஸ்வரி. இவர் தனது கணவருடன் நேற்று (ஆக.28) கொசவபட்டியிருந்து ஆண்டிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே முருகன் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 29, 2024

கல்விக் கடன் சிறப்பு முகாம்

image

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாளை (ஆக.30) கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது 10 ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, பெற்றோரின் பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம், கல்லூரி கல்வி உறுதி சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 28, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் நிதி உதவி வழங்கல்

image

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.28) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தனியார் பெரு நிறுவனங்களின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியில் இருந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவியினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News August 28, 2024

தேனியில் கல்வி கடன் முகாம் – ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்விக் கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 11 மணியளவில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

தேனியில் பள்ளி கலைத்திருவிழா போட்டிகள் இன்று துவக்கம்

image

தமிழக அரசால் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216-ல் பள்ளி அளவிலான போட்டிகள் இன்று முதல் ஆக.30 வரை நடைபெறவுள்ளன. முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களின் பெயர்களை செப்.,3க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

News August 28, 2024

வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் மீண்டும் திறப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் பாசனத்திற்கான தண்ணீர் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் என மொத்தம் 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

News August 28, 2024

வீட்டில் கஞ்சா வளர்த்து விற்பனை

image

தேனி தேவதானப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது வீட்டின் காலியிடத்தில் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்து கஞ்சா செடியை அகற்றினர். மாரியப்பனை போலீசார் கைது செய்த நிலையில் வீட்டு சுவர் ஏறி தப்ப முயன்ற அவரது மகன் பால்பாண்டி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.

News August 27, 2024

கும்பாபிஷேக விழாவிற்கு ஓபிஎஸ்-க்கு அழைப்பு

image

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் எரசக்கநாயக்கனூர் ஶ்ரீ பராசக்தி அம்மன் கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான அழைப்புகளை கோவில் நிர்வாகிகள் பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினர்.

News August 27, 2024

10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி,திண்டுக்கல்,திருப்பூர்,கோவை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

News August 26, 2024

தேனியில் குறு மாரத்தான் போட்டிக்கு அழைப்பு

image

தேனி, சின்னமனூர் ஒன்றியம், மார்க்கையன்கோட்டை அய்யப்பன் கோவில் திடலில், வரும் செப்.,5 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வ. உ. சி இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு குறு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டியின் முதல் சுற்று 16 வயது முதல் 23வயது வரை, 2ம் சுற்று 10வயது முதல் 15வயது வரை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!