Theni

News September 1, 2024

ராணுவவீரர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

image

வடபுதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் மதன்கோபால். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மதன்கோபால், அவரது தந்தை வீரதாஸ், தாய் முருகேஸ்வரி, சகோதரர் கிருஷ்ணன், பாட்டி நாகரத்தினம் ஆகியோர் கூடுதலாக வரதட்சிணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக தேனி எஸ்.பி இடம் சந்திரபிரபா புகாரளித்தார். மதன்கோபால் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (ஆக.31) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News August 31, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 31, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (31). இவர் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு, சதாம் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் நேற்று (ஆக.30) சதாம் உசேன் மீது போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News August 31, 2024

தேனியில் ரூ.25.48 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் வேல்முருகன் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார். இவர்க்கு வேனுகோபால் என்பர் அறிமுகமானர்.ஸ்கேன் மெஷின்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.33.48 லட்சத்தை வங்கி மூலம் வேல்முருகனிடம் பெற்றுகொண்டார்.ஆனால் மெஷின் அனுப்பவில்லை.பின் ரூ.8 லட்சத்தை வேல் முருகனிடம் வழங்கினார். மீதித்தொகை ரூ.25.48 லட்சத்தை தரமால் ஏமாற்றினார். போலீசார் வேனுகோபால் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்

News August 30, 2024

தேனியில் போலி சித்த மருத்துவர் கைது

image

பெரியகுளத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி ராஜேஸ் வரியை, சிகிச்சைக்காக பாலகிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு உடல் நிலை மோசம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின் இதுகுறித்து இணை இயக்குனர் ரமேஷ் பாபு கொடுத்த புகாரில் பிசி பட்டி போலீசார் விசாரித்து, ராமசாமியை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News August 30, 2024

ரேசன் கடையில் எம்பி ஆய்வு

image

கம்பம்மெட்டு குடியிருப்பிலுள்ள ரேசன் கடையில் தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் நேற்று (ஆக.28) ஆய்வு மேற்கொண்டார். இதில் பயனாளிகளின் எண்ணிக்கை, பொருள்களின் இருப்பு குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ரேசன் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்பட்டது. இவற்றை அகற்றும்படி அவர் உத்தரவிட்டதையடுத்து கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர்.

News August 30, 2024

போடியில் பெண் நலன் காக்கும் மருத்துவ முகாம்

image

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் நலன் காக்கும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் போடிநாயக்கனூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி சங்கர், நகர்மன்ற துணைத் தலைவர், மகளிர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள்

image

தேனி மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் 90 சதவீதம் காலியாக உள்ளது. இதனால் நோயாளிகள் மருந்து மாத்திரை பெற சிரமம் ஏற்படுகிறது. எனவே  மருந்தாளுனர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 29, 2024

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

image

தேனி மாவட்டத்தில் மொத்தம் 130 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுவிலார்பட்டி, ஊஞ்சாம்பட்டி, கடமலைகுண்டு ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. விரைவில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 29, 2024

108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

image

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (ஆக.30) தேனி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தேர்வுகள் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 044-2888 8060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!