Theni

News April 4, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 03.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி – ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோயில்

image

தேனியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கண்ணகி கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். இது கடல் மட்ட அளவிலிருந்து சுமார் 5000 கி.மீ உயரத்தில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி. அன்று இங்கு கேரளா மற்றும் தமிழக மக்கள் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வர்.

News April 3, 2025

தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட சூப்பர்வைசர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு<<>> கிளிக் செய்து 16-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

தேனி மக்களுக்கு ஏப்ரல் 5 முக்கியமான நாள் 

image

தேனி, பெரியகுளம், சின்னமனுார் செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்.5ல் காலை 11:00 முதல் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் கட்டண பிரச்னைகள், குறைந்த மின்னழுத்த புகார்கள் தீர்வு காணலாம். இதில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 3, 2025

வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 3, 2025

பெரியகுளத்தில் பயங்கரம் – சிறுவன் கொலை

image

பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தி(43) தனது தம்பி பாண்டீஸ்வரன்(33), மகன் நிஷாந்த்(14) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்யும் பாண்டீஸ்வரன் ஏப்ரல்.1 அன்று மது அருந்த பணம் கேட்டு ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்த ஆனந்தியையும் சிறுவன் நிஷாந்தையும் இரும்பு கம்பியால் பாண்டீஸ்வரன் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான். போலீசாருக்கு பயந்து பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 3, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 02.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 2, 2025

சிறப்பு வாய்ந்த குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

image

நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் ஆலயம். ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இந்த கோயிலில் பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். சனிக்கிழமை தோறும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெகும், தோஷங்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!