Theni

News May 17, 2024

தேனி: காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

image

தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 17, 2024

தேனி: அரசு பேருந்து மோதி விபத்து

image

கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வம். கடந்த 15ஆம் தேதி இரவு 11 மணியளவில் காக்கில் சிக்கையன்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கம்பம் சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

News May 17, 2024

தேனி: களத்தில் இறங்கிய விவசாயிகள் 

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.

News May 16, 2024

தேனி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்திற்கு மே.16 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் மே.17-19 ஆகிய நாட்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் மே.20 அன்று சிவப்பு எச்சரிக்கையும் அறிவித்துள்ளது. அது சமயம் பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 – 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் தகவல்.

News May 16, 2024

தேனி மழைப்பொழிவு விவரம்

image

தேனி மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சோத்துப்பாறை பகுதியில் 9 செ.மீட்டரும், அரண்மனைப்புதூர் பகுதியில் 2 செ.மீட்டரும், தேக்கடி பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 16, 2024

குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை

image

தேனி மாவட்டம் கம்பம் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டபோது அதில்3 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விசாரணையில், கேரளாவை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

News May 16, 2024

தேனிக்கு ரெட் அலர்ட்!

image

தேனி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

வைகை அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

image

தேனி மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. மேலும், வைகை அணையில் இருந்து பாசன பகுதிக்கு விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

News May 16, 2024

ஓட்டு எண்ணும் பணி; 320 அலுவலர்களுக்கு பயிற்சி

image

தேனி  ஓட்டு எண்ணிக்கையின் போது பணிபுரிய கண்காணிப்பாளர்கள் 96 பேர், உதவியாளர்கள் 96 பேர், நுண்பார்வையாளர்கள் 96 பேர், மின்னணு ஓட்டுகளை கணக்கிட 18 பேர், தபால் ஓட்டுகளை கணக்கீட 32 பேர் என 320 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.

News May 16, 2024

வெளிநாடுகளில் உயர் கல்வி பயில பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளில் உயர் படிப்பை பயில விரும்பும் ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளத்தின் மூலம் 31.05.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை https://overseas. tribal. gov. in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் எனவும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!