India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் மே.20ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம், மண் சரிவால் பாதிக்கப்பட கூடிய 43 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் பொதுமக்களை தங்க வைக்க தாலுகா வாரியாக தேனி 5, பெரியகுளம் 7, ஆண்டிப்பட்டி 13, உத்தமபாளையம் 9, போடி 9 என மொத்தம் 43 இடங்களில் 66 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி செய்யும் இடமான லோயர்கேம்பில் அடிக்கடி பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. எனவே மக்கள் அவதி அடைந்துள்ளனர். மின்வாரிய குடியிருப்பு, குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனில் மட்டும் மின்தடை ஏற்படவில்லை. காலனி கார் நிலையதெரு ஆகிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மின்தடை அதிகமாக ஏற்படுகிறது. குள்ளப்பகவுண்டன்பட்டி மினி பவர் கவுசில் இருந்து லோயர்கேம்பிற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கூடலுாரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்கு பின் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட சீதோசன நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுக்கும் அணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பெரியகுளம் மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.
பெரியகுளம் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில் மாஸ்டர் ரமேஷிடம் வில்வித்தை பயிற்சி பெற்ற மாணவர்கள் நேதீஷ் குமார் பிரித்தீஷ் குமார் ஆகியோர் திருச்சி துறையூரில் நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனர். இருவரும் முதலிடம் பெற்று தங்க பதக்கங்களை வென்று பாராட்டு பெற்றனர்.
கூடலூரை சோ்ந்த கிருஷ்ணகுமாா் கடந்த மே.15ஆம் அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தின் முள் வேலியிலிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதனையடுத்து இவரது உறவினா்கள் தோட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை 3-வது நாளாக நேற்று வாங்க மறுத்தனா். இதுகுறித்து போலீசார் தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தேனியில் கனமழை முதல் மிககனமழைக்கு பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தேனியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-2025 கல்வி ஆண்டில் வெளிநாடுகளில் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உயர்படிப்பை தொடர தேர்வு செய்யப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாணவர்கள் http://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில் மே 31குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.06.2024 ஆட்சியர் தகவல்
Sorry, no posts matched your criteria.