Theni

News May 22, 2024

தேனி: மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு

image

மாநில விளையாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் கால்பந்து வீரர்களுக்கு மாநில அளவிலான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 – 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மைதானங்கள் தயார் படுத்தப்பட்ட நிலையில், தேனிக்கு மே 23 வரை அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

தென்னையில் கூன் வண்டு – கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்

image

தேனி அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதிகளில் தென்னை மரங்களில் அதிகளவில் நோய் தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று(மே 21) வேளாண் துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள தென்னை தோப்பில் ஆய்வில் ஈடுபட்டு, சிகப்பு கூன் வண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து,
அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

News May 21, 2024

தேனி: நாளை ஆரஞ்சு அலர்ட்!

image

தேனிக்கு நாளை (மே.22) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

தேனி: கணவன் சந்தேகம்; மனைவி தற்கொலை

image

கோட்டூரைச் சேர்ந்தவர் நூர்ஜகான். கடந்த வாரம் அவரது கணவர் வீட்டில் வைத்து விட்டு சென்ற 300 ரூபாய் காணாமல் போனது. அதனால் அவர் மனைவி நூர்ஜகானை சந்தேகப்பட்டு கேட்டார். அதனால் ஒரு வாரமாக மன வேதனையில் இருந்த நூர்ஜஹான் நேற்று அவர்களது தோட்டத்து வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

தேனியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

தேனி: கனமழைக்கு வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

தேனி: மாமியாருக்கு அடி உதை

image

முல்லை நகரை சேர்ந்தவர் முருகதேவதி. இவரது மகன் மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி அவரது மருமகள் செல்வக்கனி தலைமையிலான 4 பேர் முருகதேவதியை அடித்து உதைத்து கத்தியால் அவரது இரண்டு கையிலும் கீறி காயம் ஏற்படுத்தினர். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

News May 20, 2024

தேனி அருகே பயங்கரம்

image

ஒட்டனையைச் சேர்ந்தவர் மலைராஜன். இவர் சிறுகுளத்து கண்மாயை ஏலம் எடுத்து மீன் பிடித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் கருப்பசாமி என்பவர் 10 கிலோ மீன் கேட்டுள்ளார்.  மலைராஜன் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டு, கருப்பசாமி அரிவாளால் மலைராஜனை வெட்டினார். தடுத்தபோது அவரது கையில் வெட்டு விழுந்தது. மலைராஜனின் மனைவி தாய் என்பவருக்கும் அடி விழுந்தது.

News May 20, 2024

பெரியகுளம்: முதல் கட்ட எச்சரிக்கை

image

பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழையால் வராகநதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகளவில் செல்வதால் வராகநதியில் யாரும் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இறங்கக்கூடாது எனவும், வராகநதி செல்லும் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News May 19, 2024

அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 22 ஆம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!