Theni

News June 10, 2024

டூவீலர் மோதியதில் மூன்று பேர் காயம்

image

ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று(ஜீன்.10) வேலப்பர் கோவிலுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் 3 வயது குழந்தை உட்பட மூன்று பேர் காயங்களுடன்  மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 10, 2024

பள்ளிகள் திறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

தேனியில் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 383 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மூலமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை (ஜூன்.10) பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் தேனியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 9, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 154 மையங்களில் குரூப் -4 தேர்வு நடைபெறுகின்றது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி மேரி மாதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

News June 9, 2024

சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

image

தேனியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினர் ஆகியோர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

News June 9, 2024

சேதம் அடைந்த நிலையில் பள்ளி கட்டிடம்

image

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 7-ம் வகுப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து சீரமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 9, 2024

மக்கள் நீதிமன்ற முகாம்களில் 6,449 வழக்குகளுக்குத் தீா்வு

image

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நேற்று (ஜூன்.8) நடைபெற்றது. இதில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விபத்து இழப்பீடு, காப்பீடு, வங்கிக் கடன், காசோலை, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

News June 8, 2024

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

குரூப்-1 க்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 11.06.2024  முதல் துவங்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மையத்தை நேரிலோ அல்லது 6379268661
என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தேனி மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

இணையதளம் மூலம் நில அளவை விவரங்கள்

image

தமிழ்நாடு நிலஅளவை, நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ் நிலம்” செயலி
மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

முன்னாள் ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு

image

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் காமாட்சி. இவரது மகன் ரமேஷிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பால் வாங்க சென்ற சுவேதாவிடம் காமாட்சி தகராறில் ஈடுபட்டதால் அவரை ராம்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!