India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தேனி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.அறிவொளி அறிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை மற்றும் கனமழை பெய்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரத்தையும் விட கொடூரமாக அடித்த வெயிலின் தாக்கத்தை இந்த மழை வெகுவாக தணித்தது . தற்போது பெரியார் அணை பகுதியில் 5.4 மி.மீட்டரும் தேக்கடி பகுதியில் வெறும் 0.6 மி.மீட்டர் மட்டும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் மழை பொழிவு இல்லை.
வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே.29) தொடங்கி வருகிற ஜூன்.12 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவா்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அதன் 2 நகல்களை கொண்டு வர வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும் என கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்துக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்களைக் தேனியிலிருந்து வாகனங்கள் மூலம் நேற்று (மே.28) எடுத்துச் சென்றனா்.
ஆண்டிப்பட்டியில் வட்டாட்சியராக பணியாற்றி வருபவர் காதர் செரீப். இவர் புதிதாக பெட்ரோல் பங்க் தொடங்க தடையின்மை சான்று வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி, சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து வேண்டிக்கொள்வர். புராணக்கதைகளைக் கொண்ட இத்தலம் சனிப்பெயர்ச்சிகளில் மிகுந்த விசேஷத்துடன் பூஜைகள் நடபெற்று வரும். இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி நகர் பகுதியில் இயங்கி வரும் அனிபா பிரியாணி நிறுவனத்தினர் உலக பசி தினத்தினை அனுசரிக்கும் விதமாக மாவட்டத்தில் பசியால் வாடக்கூடிய 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் பிரியாணி தயார் செய்து வழங்கினர். இந்நிகழ்வை சின்னத்திரை பிரபலம் KPY.பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்
தேனி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சின்னமனூரைச் சேர்ந்தவர் சங்கிலி ராஜேஷ். இவர் உறவினர் பரத்வாஜ் என்ற சிறுவனுடன் வத்தலகுண்டு சென்று விட்டு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். எ.புதுப்பட்டி அருகே வந்தபோது நிலை தடுமாறிய டூவீலர் சாலை தடுப்பில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கிலி ராஜேஷ் உயிரிழந்தார். பரத்வாஜ் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள், மாணவிகள் http://scert.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 73730 03457 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.