India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள தனியாா் ஏ.டி.எம். மையத்தில் மே.29 இரவு மா்ம நபா்கள் சிலா் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனா். ஆனால், இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை உடைக்க முடியாததால் அவா்கள் அங்கிருந்து சென்றுவிட்டனா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.
இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது தோட்டத்தின் அருகில் இறங்க முயன்ற போது ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் ஆட்டோவை எடுத்ததால் மல்லிகா கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட நிலையில், தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தேனியில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது சின்ன சுருளி அருவி. மேகமலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் இந்த அருவி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் சீசன் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். நீர் வரத்தை தெரிந்து கொண்டு அருவிக்கு செல்வது நல்லது. பிரபலமடையாத சுற்றுலாத் தலமாக இருப்பதால் தங்கும் வசதிகள் இல்லை. அதற்கு ஏற்றார் போல் தயார் நிலையில் இந்த அழகிய அருவிக்கு வருகை தரலாம்.
பெரியகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மணி தூண்டுதலில் அவரது நண்பர்கள் பழனி, நவநீத் , சுரேந்தர், ஹரி ஆகியோர் பெண்ணை கடத்தி சென்று காருக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் ஜூன். 9-ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433, ஆண்டிப்பட்டி 5098, போடி 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையத்தில் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வழக்கில் பாலமுருகன் என்பவரை பழனிசெட்டிபட்டி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து நேற்று (மே.29) 3:00 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சாவை துாத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் பெற்று, அதனை மகேந்திரன் என்பவருக்கு வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம், பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதீய சாக் ஷயா சன்ஹிதா என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஜூலை 1ல் இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ள நிலையில், தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நேற்று (மே.29) போலீசாருக்கு அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
வருசநாட்டை சேர்ந்தவர் அறிவழகன். காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு மேளதாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தகராறில் சூரியபிரகாஷ் என்பவர் ஹாரன்அடித்ததை அறிவழகன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ் கல்லால் அறிவழகன் மண்டையை அடித்து உடைத்துள்ளார். அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதிகளில் அதிகமாக நாட்டு மாடுகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள மக்கள் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக நாட்டு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது. மேலும், மேய்ப்பதற்கான இடங்கள் இல்லை எனவும் மலைகளில் வனத்துறை அனுமதிப்பதில்லை என தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்னும் சில நாட்களில் பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில் தேனி பகுதியில் பலத்த காற்று, மழையினால் மரங்கள், கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் நேரடியாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். மின்வாரிய அலுவலகத்திற்கு 94987 94987 என்ற அலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மரங்கள் முறிந்த இடத்தில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என மின்வாரியத்தினர் அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.