Theni

News June 14, 2024

சண்டையில் விரலைக் கடித்து குதறிய சம்பவம்!

image

சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி. மேல்மங்கலத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் 12ம் தேதி இரவில் காமாட்சியின் வீட்டின் முன் நின்று, ஆபாசமாக பேசியதை கண்டித்த காமாட்சியின் மனைவியை தாக்கியதால் அதை தடுக்க முயன்றார். அப்போது காமாட்சியை அடித்து உதைத்த செல்லமுத்து அவரின் வலது கை நடுவிரலை கடித்து குதறினார் . ரத்தம் வழிந்த நிலையில் அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

News June 14, 2024

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

image

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் நேற்று (ஜூன்.13) தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள் தங்களுக்கு காலதாமதமின்றி மாத ஊதியம், பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

News June 14, 2024

தேனி: 1371 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

தேனி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுவரை 1371 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 22 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 180 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News June 13, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 12, 2024

தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி மாவட்டம் சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை காலியாக உள்ள 1 மைய நிர்வாகி மற்றும் 1 வழக்கு பணியாளர் ஆகிய 2 பதவிகளுக்கான பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழு விவரங்களை theni.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து ஜூன் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஜூன்.15 இல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

தேனி மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் வருகின்ற ஜூன்.15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பெரியகுளம், நல்லகருப்பன்பட்டி,  தேனி, கொடுவிலார்பட்டி, ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர், ஸ்ரீரங்கபுரம், உத்தமபாளையம், லோயர் கேம்ப், போடி அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

வரத்து குறைவால் கிலோ ரூ.200 ஆக விலை உயர்வு

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த இஞ்சி வியாபாரிகள் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து இஞ்சி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இஞ்சி இறக்குமதி செய்யக்கூடிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தேனி சந்தைகளில் கடந்த வாரம் கி.80 என விற்கப்பட்ட இஞ்சி தற்போது கி.200 என விற்கப்பட்டு வருகின்றது

News June 12, 2024

தேனி: பள்ளி மாணவனை அடித்து உதைத்த இருவர் கைது

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 11ம் வகுப்பு படித்துவருகிறார். அவர் கடந்த 7ம் தேதி டியூசன் முடிந்து இரவு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரதீஷ், ஆதித்யன் ஆகிய இருவர் அவருடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தனர். அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் போலீசார் நேற்று அடித்த இருவரையும் கைது செய்தனர்.

News June 12, 2024

தேனி அருகே காவல் நிலையத்தில் ரகளை

image

உசிலம்பட்டியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலரான திவ்யா என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 10) தாய்மாமன் மகன் விஜயகுமாா் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ராஜதானி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்காக வரவழைத்த நிலையில் இருதரப்பினரும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

News June 11, 2024

தேவாரத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து

image

தேவாரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று அவிநாசியப்பர் கோவில் அருகே முழு போதையில் தள்ளாடியபடி வந்த மணி, பொன்னுச்சாமி ஆகிய இருவரையும் கவனமாக போகும்படி கூறினார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் பாண்டியனை சரமாரியாக தாக்கி, மணி தான் வைத்திருந்த கத்தியால் பாண்டியனை குத்தினார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!