Theni

News November 20, 2024

தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*

News November 20, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்

image

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.

News November 20, 2024

தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர் 

image

தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.

News November 20, 2024

தேனியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் முகாம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.

News November 20, 2024

சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

image

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.

News November 20, 2024

தேனியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் கைது

image

தேனியில் தொடர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி, அம்சராஜை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருடியதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது; கோவை சிறையில் இருவருரையும் அடைத்தனர்

News November 20, 2024

பெரியகுளத்தில்; உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்

image

பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.20) காலை 9 மணி முதல் நாளை (நவ.21) காலை 9 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மருத்துவமனைகள், அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

சபரிமலை சென்று திரும்பிய வாகனம் விபத்து

image

தேனி மாவட்டம், பெரியகுளம் சாலையில் சபரிமலை சென்று திரும்பிய நேற்று(நவ.19) வடமாநில ஐயப்ப பக்தர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் பிரசன்னா, ராஜா, குமார், உள்பட ஐந்து பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2024

பெண்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், வறுமை கோட்டிற்குள்ள பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் நடமாடும் உணவகங்கள், சிற்றுண்டிகடைகள், சலவைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு பெற இயலும். விண்ணப்பிக்க டிச.7ஆம் தேதி என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

மதுரை மாவட்டத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு – தகவல்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 9 நாட்களாக வைகை பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. இன்று (நவ.20) பூர்வீக பாசன பகுதி – 2 மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் காலை 11 மணி முதல் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!