India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி: மாவட்டத்தில் நவ.23 & 24 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் மாவட்டத்தில் உள்ள 1226 ஓட்டுச்சாவடிகளில் முகாம் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாம் நாட்களை தவிர்த்தும் பிற வேலை நாட்களில் ஓட்டுச்சாவடி மைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலகங்கள், ஆர்.டி.ஓ.,அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் நவ. 28 வரை விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்சேர்ந்த மாதேஷ் மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை கருப்பசாமி கோவிலுக்கு நவ.19.ல் வந்துள்ளார். அன்று இரவு கோயில் வளாகத்தில் தங்கிய மனைவி மாயமானார். போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று(நவ.21) கோவில் அருகே ஆத்துக்காடு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை.

தேனி மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

போடியைச் சார்ந்த ஆண்டிவேல் மனைவி ஆனந்தியுடன் வசித்து வந்தார். கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஆண்டிவேல் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஆண்டிவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் இருமுடியில் பாலிதீன் பைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை கொண்டு வந்து ஆங்காங்கு போடுவதை தவிர்க்க வேண்டும். சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது அதனை பராமரிப்பது பக்தர்களின் கடமையாகும். பம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளை விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இவைகளெல்லாம் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் இருமுடியில் பாலிதீன் பைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை கொண்டு வந்து ஆங்காங்கு போடுவதை தவிர்க்க வேண்டும். சபரிமலை என்பது 18 மலைகளால் சூழப்பட்டது அதனை பராமரிப்பது பக்தர்களின் கடமையாகும். பம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளிப்பதும், ஆடைகளை விட்டுச் செல்வதும் மிகவும் தவறு. இவைகளெல்லாம் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 18ம் படி ஏறி வரும் பக்தர்கள் இடப்பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை (அய்யப்பன்)தரிசனம் செய்ய வேண்டும். பார்க்க ஒரு சில வினாடி அதுவும் கிடைக்காமலும் போகலாம். 18ம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் வழியாக பார்த்து சென்று விட முயற்சிக்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றன என்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் வைகை அணை நீர் மட்டம் 71 அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. கடந்த சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் கடந்த ஒரு வாரமாக திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி குறைந்து 60 அடியாக குறைந்துள்ளது.

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை (நவ.21) சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தேவையுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.