India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் நடப்பு சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 2,149 மெ.டன்னும், DAP 786 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 485 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,088 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நேற்று (21.06.2024) நடைபெற்றது. தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த சிறப்பு கையேட்டினை விவசாயிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 63.35 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 42 மெ.டன்னும் (NLR, CO 55), சிறுதானியங்கள் 5.3 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் 9.5 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 4.9 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ. சஜீவனா இன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் 688 ஹெக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 104 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 234 ஹெக்டேரிலும், பருத்தி 148 ஹெக்டேரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 148 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (21.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, சிறுதானிய உணவு எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுக்கான முழுமாதிரி தேர்வு வரும் ஜூன்.24, 27 மற்றும் ஜூலை 02/05 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.ஸி தரத்தில் நடத்தப்படவுள்ளது. தேர்வர்கள் இத்தேர்வினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போடியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கும் இவரது கணவர் பாண்டிக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இவர் கணவருக்கு பயந்து பக்கத்தில் உள்ள காமுத்தாய் என்ற உறவினர் வீட்டில் சென்று ஒளிந்து கொண்டார். அங்கு தேடிச் சென்ற பாண்டியை காமுத்தாயின் உறவினர்கள் கல்லால் அடித்து மண்டையை உடைத்தனர். அவர் போடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டை, முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18-60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத, குடும்பத்தில் ஒருவர் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.